திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
முருகு சோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
ஆண்டு பலன்கள் 2015- துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசி நேயர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும்.
குடும்பம், பொருளாதாரம்
இந்த வருடம் முழுவதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.
பெண்களுக்கு
இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி வாக்கு ஸ்தானத்தி லிருப்பதால் உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு
விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.
கலைஞர்களுக்கு
இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும்.
மாணவ- மாணவியருக்கு
மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபம் காணமுடியும். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 01-01-2015 பகல் 11.47 மணி முதல் 03-01-2015 இரவு 07.24 மணி வரை; மற்றும் 28-01-2015 மாலை 05.12 மணி முதல் 31-01-2015 பகல் 01.17 மணி வரை.
பிப்ரவரி
குடும்ப ஸ்தானமான 2-ல் சனியும் சுக ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவுக்கு லாபம் கிட்டும். புதிய முயற்சிகளிலும் சாதகப் பலன் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 24-02-2015 இரவு 11.46 மணி முதல் 27-02-2015 காலை 07.01 மணி வரை.
மார்ச்
ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். துர்க்கை யம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 24-03-2015 காலை 08.35 மணி முதல் 26-03-2015 மதியம் 02.15 மணி வரை.
ஏப்ரல்
ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதாலும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-04-2015 மாலை 06.54 மணி முதல் 22-04-2015 இரவு 11.10 மணி வரை.
மே
கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் சிறுசிறு நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிலும் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதால் வீண் பிரச்சினைகளும் குறையும். பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.
சந்திராஷ்டமம்: 18-05-2015அதிகாலை 04.52 மணி முதல் 20-05-2015 காலை 08.50 மணி வரை.
ஜூன்
அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். தொழில், வியாபாரத்திலும் வீண் விரயங்களும், கூட்டாளிகளிடையே பிரச்சினைகளும் உண்டாகும். சஷ்டி விரதம், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.
சந்திராஷ்டமம்: 14-06-2015 மதியம் 01.04 மணி முதல் 16-06-2015 மாலை 05.42 மணி வரை.
ஜூலை
இம்மாதம் வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் பணம் பல வழிகளில் தேடிவரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். பண வரவு களிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 11-07-2015 இரவு 07.18 மணி முதல் 13-07-2015 இரவு 12.56 மணி வரை.
ஆகஸ்ட்
லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தொழில், வியாபாரரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் அமைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாவதோடு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதாரம் உயர் வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 07-08-2015 இரவு 12.41 மணி முதல் 10-08-2015 காலை 06.42 மணி வரை.
செப்டம்பர்
செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எதிலும் ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பச் சூழலும் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 04-09-2015 காலை 07.02 மணி முதல் 06-09-2015 மதியம் 12.17 மணி வரை.
அக்டோபர்
ஏழரைச் சனி தொடர்ந்தாலும் 11-ல் செவ்வாய், குரு இருப்பதால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். திருமண சுப காரியங்களும் கைகூடும். பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 01-10-2015 மதியம் 03.39 மணி முதல் 03-10-2015 இரவு 07.14 மணி வரை; மற்றும் 29-10-2015 அதிகாலை 02.14 மணி முதல் 31-10-2015 காலை 04.21 மணி வரை.
நவம்பர்
ஏழரைச் சனி தொடர்வதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும் 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைப் பளு சற்று கூடும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 25-11-2015 மதியம் 01.04 மணி முதல் 27-11-2015 மதியம் 02.50 மணி வரை.
டிசம்பர்
லாப ஸ்தானத்தில் குருவும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமையும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-12-2015 இரவு 10.04 மணி முதல் 24-12-2015 இரவு 12.46 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5, 6, 7, 8; நிறம்- வெள்ளை, பச்சை; கிழமை - வெள்ளி, புதன்; திசை - தென்கிழக்கு; கல் - வைரம்; தெய்வம் - லட்சுமி.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான ராகு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment