திங்கள் முதல் வெள்ளி வரை
விஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
ஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தன ஸ்தானத்துக்கு மாறுதலாகிறார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
உடல் ஆராக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் நிம்மதியான உறக்கம்கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால், உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.
குடும்பம், பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப் பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவி னர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.
உத்தியோகம்
குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.
பெண்களுக்கு
ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகளும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குருமாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக் குப்பின் பணம் கொடுக்கல்- வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்த வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு
விவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.
கலைஞர்களுக்கு
ஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனி 2 -ஆம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.
மாணவ- மாணவியருக்கு
கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.
மாதப் பலன்கள்
ஜனவரி
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். குருப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-01-2015 காலை 08.49 மணி முதல் 24-01-2015 காலை 09.14 மணி வரை.
பிப்ரவரி
முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சி ளில் நிறைய தடைகளுக்குப் பின்தான் வெற்றிகிட்டும். சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-02-2015 இரவு 07.57 மணி முதல் 20-02-2015 மாலை 07.15 மணி வரை.
மார்ச்
ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதும் 8-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடைகளும் நெருங்கியவர்களிடம் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையைக் கொடுக்கும். கணவன்- மனைவி யிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்ப ஒற்றுமையும் குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தை அடைவீர்கள். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-03-2015 காலை 06.58 மணி முதல் 20-03-2015 காலை 06.34 மணி வரை.
ஏப்ரல்
ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-04-2015 பகல் 03.52 மணி முதல் 16-04-2015 மாலை 04.55 மணி வரை.
மே
மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 2-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் விலகிச்செல்லும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரரீதீயாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உறவினர்களை சற்று அனுசரித் துச்செல்வது நல்லது. விநாயக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 11-05-2015 இரவு 10.18 மணி முதல் 13-05-2015 இரவு 12.50 மணி வரை.
ஜூன்
முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும், பயணங்களால் அனுகூலங்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே இருக்கும். என்றாலும் பிறரை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 08-06-2015 அதிகாலை 03.40 மணிமுதல் 10-06-2015 காலை 06.39 மணி வரை.
ஜூலை
விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது வீண் விரயங்களையும் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளையும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கும் அமைப்பாகும். என்றாலும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 05-07-2015 காலை 10.00 மணி முதல் 07-07-2015 பகல் 12.08 மணி வரை.
ஆகஸ்ட்
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானத்தில் குருவும் முயற்சி ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள், பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரம் உயர்வதால் கடன்களும் குறையும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 01-08-2015 மாலை 06.30 மணி முதல் 03.08.2015 இரவு 07.11 மணி வரை. மற்றும் 29.08.2015 அதிகாலை 04.11 மணிமுதல் 31-08-2015 அதிகாலை 04.37 மணி வரை.
செப்டம்பர்
தன ஸ்தானமான 2-ல் குருவும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகளும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்
சந்திராஷ்டமம்: 25-09-2015 மதியம் 03.35 மணி முதல் 27-09-2015 பகல் 03.37 மணி வரை.
அக்டோபர்
தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் ராகு, சூரியனும் சஞ்சாரம் செய்வதால் செல்வம், செல்வாக்கு உயர்வடையும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களும், வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்துகொண்டால் சற்று அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனிப்ரீதி உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-10-2015 இரவு 12.48 மணி முதல் 25-10-2015 அதிகாலை 02.18 மணி வரை.
நவம்பர்
ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 19-11-2015 காலை 07.33 மணி முதல் 21-11-2015 காலை 10.48 மணி வரை
டிசம்பர்
தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வ தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகவே நடைபெறும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான நிலை நிலவும். உற்றார்- உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-12-2015 பகல் 12.54 மணி முதல் 18-12-2015 மதியம் 04.48 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1, 2, 3, 9; நிறம் - வெள்ளை, சிவப்பு; கிழமை- திங்கள், வியாழன்; கல் -முத்து; திசை - வடகிழக்கு; தெய்வம் - வெங்கடாசலபதி.
பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது, படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயக ரையும் வழிபாடு செய்யலாம்.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment