Monday, April 8, 2013

அட்சயதிருதி கிராம் தங்கம் கிலோவாகும் அதிசயம்


     சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திதியான வளர்பிறை திதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். அன்று சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். அதே நேரத்தில்  சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுது தான் அட்சயதிருதி வருகிறது.

     தந்தைக்கு அதிபதி சூரியன் தாய்க்கு அதிபதி சந்திரன். எனவே அன்றைய தினம் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது அவசியம்.

     இந்த அக்ஷய திருதியை நன்னாளை பொன்னாளாக போற்றி கொண்டாடுவது மக்களின் பழக்கமாக உள்ளது. அதாவது இந்நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட அடுத்த அக்ஷய திருதியை வருவதற்குள் அது பத்து, இருபது சவரம் வாங்கக்கூடிய யோகத்தை உண்டாக்கும். பழங்காலங்களில் ஒரு சில சமுதயாத்தினர் மட்டுமே கொண்டாடிய இந்த அக்ஷய திருதியை தற்போது ஜாதி, மத தேபமின்றி யாவரும் பொன் நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
                                      
அட்சயதிருதி பூஜை

     வறுமையில் வாடுபவர்களும் அக்ஷய திருதியை நாளுக்காக சிறுக சிறுக சேமிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அக்ஷய திருதியை நாளில் நகைகள் வாங்குவது மட்டுமின்றி பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது வழிபாடு செய்வது நன்மையளிக்கும். சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றிளை தாம்பூலம், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி போன்றவற்றையும் கொடுத்து தானம் செய்யலாம். லட்சுமி தேவியை வழிபாடு செய்வது, தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்.

     அட்சய திருதியை அன்று லட்சுமி சமேத நாராயணனை வணங்க வேண்டும். விஷ்ணுவுக்கு துளசியுடன் கோதுமை போன்ற பொருளைப் படைக்க வேண்டும். கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைக்கலாம். அதன் பின்பு அவற்றை பிராமணர்களுக்கும் ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும்.

     மோர், நீர், பானகம், தானியங்கள் போன்றவற்றை தானம் செய்வதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். விபத்துகளை தவிர்க்கும். கஞ்சிக்கே வழியில்லாமல் வறுமையில் வாடிய குசேலன் கண்ணனை சந்தித்து தான் கொண்டு வந்த அவலை கொடுத்து திடீரென்று குபேரன் ஆனது இந்த அக்ஷய திருதியை நன்னாளில் தான். சித்திரை மாதம் முழுவதும் விஷ்ணுவுக்குரியது என்பதால் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலமும் நற்பலன்கள் அமையும்.

     நாமும் பிறருக்கும் நம்மால் முடிந்த உதவிகளை அள்ளி கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளி கொடுத்தாவது நமது பாவங்களை சற்று குறைத்துக் கொள்வோம்.

     இப்பொழுதெல்லாம் கோயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை கண்கூடாகவே பார்க்கிறோம். ஏன்? வாழ்வில் வளம் பெறவும் எந்த சேதங்களும் தங்களை தாக்காதிருக்கவும் தான். நாட்டில் பாவங்களை பெருக பெருக பூமித்தாயால் பாரம் தாங்க முடியாமல் சுனாமி, பூகம்பம் போன்றவை உண்டாகி பெரியளவில் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த தன, தருமங்களை செய்வோம்.

     இவ்வருடம் திருதியை திதியானது 12.5.2013 ஞாயிற்றுகிழமை காலை 09.49 மணியிலிருந்து 13.5.2013 திங்கட்கிழமை பகல் 11.49 மணி வரை உள்ளது.

     12.5.2013 ஞாயிற்றுகிழமை அன்று பிற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை. மதியம் 2.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை , மாலை 6,00 மணி முதல் 7.00 மணி வரை இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை.   13.5.2013 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை நகைகள் வாங்க உத்தமம்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 
7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com 
murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No -
 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No -
 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


No comments: