Thursday, September 29, 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 வரை 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர்  2  முதல்  8   வரை   2016


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
கிரக   மாற்றம்

3.10.2016 கன்னி புதன்



ராகு புதன் 
செவ்  
சனி 
சுக்கி
குரு 
சூரிய

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி     30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.
துலாம்    02.10.2016 மதியம் 01.19 மணி முதல் 05.10.2016 அதிகாலை 01.57 மணி வரை
விருச்சிகம் 05.10.2016 அதிகாலை 01.57 மணி முதல் 07.10.2016 மதியம் 02.24 மணி வரை.
தனுசு           07.10.2016 மதியம் 02.24 மணி முதல் 09.10.2016 இரவு 12.53 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
03.10.2016 புரட்டாசி 17 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

05.10.2016 புரட்டாசி 19 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

06.10.2016 புரட்டாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே  உங்கள் ஜென்ம ராசிக்கு  6ல் சூரியன், 7ல் சுக்கிரன் 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்ப் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்வது  நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4.

சந்திராஷ்டமம்      05.10.2016 அதிகாலை 01.57 மணி முதல் 07.10.2016 மதியம் 02.24 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 5ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     3,4,5,6.

சந்திராஷ்டமம்      07.10.2016 மதியம் 02.24 மணி முதல் 09.10.2016 இரவு 12.53 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் ராகு 6ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக¬ளால் வாங்கும் வாய்ப்பும் அமையும். சிவபெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்     5,6,7,8

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே விரய ஸ்தானமான 3ல் சூரியன் 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். துர்கை அம்மனை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள்     2,8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சூரியன் 2ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 5ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2ல் குரு சஞ்சாரம் செய்வதால்  குடும்பத்தில் கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். ஜென்ம ராசியிலே ராகு சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளையும் உண்டாக்கும் அமைப்பு என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்களை குறைக்க முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் யாவும் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். Êசர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     3,4.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் 4ல் செவ்வாய்  சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் சனி அமைந்திருப்பது சாதகமான அமைப்பு என்பதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகளை வகிப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு பரிகாரம் செய்யவும்

வெற்றிதரும் நாட்கள்     2,5,6,7.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சனி 12ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும்  முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய்  சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்     3,4,8.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் குரு, சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால்  கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு பாதிப்பு, அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வீண் அலைச்சல் டென்ஷன்களும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று நிதானம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     2,5,6,7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே  உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும், 10ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், 10 சூரியன் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     2,3,4,8.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்களுக்கு 9ல் குரு 10ல் சுக்கிரன் 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத  உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     3,4,5,6,7.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு 8ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால்  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்வீடு மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் அமையும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,6,7,8.
சந்திராஷ்டமம்                      30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே உங்களுக்கு 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. 6ல் ராகு 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும்பொன், பொருள் சேரும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு  அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் லாபங்களை பெற முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     7,8.

சந்திராஷ்டமம்      02.10.2016 மதியம் 01.19 மணி முதல் 05.10.2016 அதிகாலை 01.57 மணி வரை