Today rasi palan - 29.03.2025
இன்றைய ராசிப்பலன்
- 29.03.2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
29-03-2025, பங்குனி 15, சனிக்கிழமை, அமாவாசை திதி
மாலை 04.27 வரை
பின்பு வளர்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு
07.26 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 07.26 வரை
பின்பு பிரபலாரிஷ்ட யோகம். அமாவாசை விரதம். சனிபெயர்ச்சி இரவு 9.44 (திருக்கணிதம்) கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை
09.00-10.30, எம கண்டம் மதியம்
01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
சூரிய ராகு புதன்(வ) சுக்கி(வ) சந்தி |
|
குரு |
செவ் |
சனி |
29.03.2025 |
|
|
|
|
||
|
|
|
கேது |
இன்றைய ராசிப்பலன் - 29.03.2025
மேஷம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மன குழப்பம் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி
உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதுவரை வராத
பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த
காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை
இல்லாத வீண்
செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர
பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
துலாம்
இன்று எந்த
ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய
உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிலருக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத
நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி
உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களின் பொருளாதார நிலை
சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன்
பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.
மீனம்
இன்று உள்ளம் மகிழும் இனிய
செய்திகள் வீடு
வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு பொன்
பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.
No comments:
Post a Comment