Wednesday, September 18, 2024

Today rasi palan - 19.09.2024

 


Today rasi palan - 19.09.2024

இன்றைய ராசிப்பலன் - 19.09.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

19-09-2024, புரட்டாசி 03, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 12.40 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.04 வரை பின்பு ரேவதி நட்சத்திரம் பின்இரவு 05.15 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 05.15 வரை பின்பு அமிர்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 சந்தி

ராகு

 

குரு

செவ்

சனி (வ)

 

19.09.2024

 

 

புதன்

 

 

 சுக்கி

கேது சூரிய

 

இன்றைய ராசிப்பலன் -  19.09.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மிதுனம்

இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். வீண் செலவுகளை குறைக்கவும்.

மகரம்

இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

No comments: