Friday, October 16, 2020

Today rasi palan - 17.10.2020

 

Today rasi palan - 17.10.2020

இன்றைய ராசிப்பலன் -  17.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-10-2020, ஐப்பசி 01, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.09 வரை பின்பு வளர்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. நவராத்திரி ஆரம்பம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ்(வ)

 

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

17.10.2020

 

 சனி  

 

சுக்கி

குரு 

 

    கேது 

சூரிய புதன் (வ) சந்தி

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  17.10.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த பணிச்சுமைகள் சற்று குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சிறு இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாரா£க இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு வீண் கவலைகள் குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

No comments: