Today rasi palan - 19.09.2020
இன்றைய ராசிப்பலன் - 19.09.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
19-09-2020, புரட்டாசி 03, சனிக்கிழமை, துதியை திதி காலை 09.10 வரை
பின்பு திரிதியை திதி பின்இரவு 05.39 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம்
பின்இரவு 01.20 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல்
10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
|
|
செவ்(வ) |
|
ராகு |
|
|
திருக்கணித கிரக நிலை
19.09.2020 |
சுக்கி |
|
|
சனி(வ) |
|
||
|
குரு கேது |
|
|
சூரிய புதன் சந்தி |
இன்றைய ராசிப்பலன்
- 19.09.2020
மேஷம்
இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு
புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின்
ஒத்துழைப்பால் லாபம் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் யாவும்
பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். சுபமுயற்சிகளில்
அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின்
ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு
குறையும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள்
ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள்
உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு
நல்லது.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம்
உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்தால் மட்டுமே வெற்றி
கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய
முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
கொடுத்த கடன் வசூலாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்
நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து
கொள்வர்.
துலாம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள்
தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு
மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும்.
நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட்
சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த
பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம்
கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரில் இருந்து
வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொண்டால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அலுவலகத்தில்
உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள்
கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் வீண் அலைச்சல்
ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில்
தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.42 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால்
தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது
நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை
தவிர்க்கவும்.
No comments:
Post a Comment