Thursday, October 17, 2019

வார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை


வார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை
ஐப்பசி 3 முதல் 9 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





சந்தி ராகு

திருக்கணித கிரக நிலை


 

சனி கேது
குரு
 சூரிய புதன் சுக்கி
செவ்

கிரக மாற்றம்
23-10-2019 விருச்சிகத்தில் புதன் இரவு 11.12 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்     19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.
கடகம்       21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.
சிம்மம்      23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.
கன்னி      25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24.10.2019 ஐப்பசி 07 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியான மேன்மையான பலன்களை தரும் அமைப்பாகும். சூரியன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பொன் பொருள் சேரும். புதிய மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். அசையும்  அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  21, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 24, 25.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 26.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 24, 25.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்வில் வலமான பலன்களை பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 22, 26.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராசியதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றியும், தாராள தனவரவுகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். மகா லட்சுமி தேவியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  21, 22, 23, 24.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். முடிந்த வரை வீண் செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாட்டையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  24, 25, 26.   
சந்திராஷ்டமம் -   19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம்,  தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். சனி பகவான் வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 25, 26.
சந்திராஷ்டமம் -   21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்ககூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்து கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபட்டு வந்தால் தொல்லைகள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 22.
சந்திராஷ்டமம் -   23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருக்கும் மனகுழப்பங்கள் குறையும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். துர்கையம்மனை ராகு காலங்களில் வழிபட்டு வந்தால் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் -  22, 23, 24.
சந்திராஷ்டமம் -   25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலையானது சற்று சாதகமாக இருந்து உங்களது அனைத்து நெருக்கடிகளும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் -  23, 24, 25, 26.



No comments: