Thursday, October 18, 2018

வார ராசிப்பலன் - அக்டோபர் 21 முதல் 27 வரை


வார ராசிப்பலன் - அக்டோபர் 21 முதல் 27 வரை 
ஜப்பசி 4 முதல் 10 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,







திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  செவ்

சனி
குரு
சூரிய புதன்
சுக்கி(வ)


கிரக மாற்றம்
26-10-2018 விருச்சிக புதன் இரவு 08.43 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்                            19-10-2018 மதியம் 02.06 மணி முதல் 22-10-2018 அதிகாலை 01.18 மணி வரை.
மீனம்                                                22-10-2018 அதிகாலை 01.18 மணி முதல் 24-10-2018 காலை 09.26 மணி வரை.
மேஷம்                           24-10-2018 காலை 09.26 மணி முதல் 26-10-2018 மதியம் 02.55 மணி வரை.
ரிஷபம்                           26-10-2018 மதியம் 02.55 மணி முதல் 28-10-2018 மாலை 06.51 மணி வரை.


இவ்வாரம் சுப முகூர்த்த நாட்கள் இல்லை 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 10-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். சுக்கிரன், புதன் 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வணங்குவதும் விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 21, 24, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். அன்னை பார்வதி தேவியையும், சனீஸ்வர பகவானையும் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 26, 27.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக அனுகூலப் பலனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆனை முக கடவுளையும், ஆறுமுக கடவுளையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்த வரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ பெருமானையும், கந்த கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 26, 27.
சந்திராஷ்டமம் -   19-10-2018 மதியம் 02.06 மணி முதல் 22-10-2018 அதிகாலை 01.18 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 3-லும் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். துர்கையம்மன் வழிபாடு மேன்மையான பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 26, 27.
சந்திராஷ்டமம் -   22-10-2018 அதிகாலை 01.18 மணி முதல் 24-10-2018 காலை 09.26 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் சுபிட்சங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.
சந்திராஷ்டமம் -   24-10-2018 காலை 09.26 மணி முதல் 26-10-2018 மதியம் 02.55 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 2-ல் குரு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சிறப்பான பணவரவுகள் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் -   26-10-2018 மதியம் 02.55 மணி முதல் 28-10-2018 மாலை 06.51 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும் என்பதால் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடுவதில் தாமதம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்து செல்வது நல்லது. வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 26, 27.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன், சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியிலும் ஓரளவு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் 6-ல் ராகு 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை எளிதில் அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விநாயக பெருமானையும் முருக கடவுளையும் வணங்கினால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 24, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியை குரு பார்ப்பதும் 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியிலும் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26, 27.



No comments: