Friday, June 8, 2018

வார ராசிப்பலன் -- ஜுன் 10 முதல் 16 வரை


வார ராசிப்பலன் -- ஜுன் 10 முதல் 16 வரை 
வைகாசி  27  முதல் ஆனி 2 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சந்தி
சூரிய புதன்

               
திருக்கணித கிரக நிலை

ராகு
சுக்கி
கேது  செவ்

சனி(வ)
 
குரு(வ)               


கிரக மாற்றம்
10-06-2018 மிதுன புதன் காலை 07.32 மணிக்கு
15-06-2018 மிதுன சூரியன் பகல் 11.36 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்           09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.
ரிஷபம்            12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.
மிதுனம்          14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை.
கடகம்              16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10.06.2018 வைகாசி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சிறப்பான பணவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14, 15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராசியதிபதி சுக்கிரன், ராகு சேர்க்கைப் பெற்று இருப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதன் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் லாபகரமான பலனை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 16.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 8-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பணவரவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்- தடங்கல்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் திடீர் விரயங்களை எதிர் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14, 15.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறப்பான ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருகனையும் அம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13, 16.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் ராசியதிபதி சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு புதிய வாய்ப்புகளும் எதிர்பார்த்த உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடுவதும் குரு பகவான் வழிபாடு செய்வதும் சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்-.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.
சந்திராஷ்டமம் -   09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.


துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ பெருமானையும் முருக கடவுளையும் வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 16.
சந்திராஷ்டமம் - -                12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் கால தாமங்கள் உண்டாகும். சூரியன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாடும் விஷ்ணு பகவான் வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.
சந்திராஷ்டமம் - -14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்கும் மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்களின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். லட்சுமி தேவி வழிபாட்டை செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.
சந்திராஷ்டமம் - 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.


மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களது தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்படுவது உத்தமம். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் புதன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது நல்ல பலன்களை அடைவீர்கள். 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.  வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 16.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தி அதிக லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13.


No comments: