Wednesday, July 1, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 மகரம்

வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?


12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி


96 பக்கம் இலவச இனைப்பு



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)



குரு பெயர்ச்சி பலன்  2015 - 2016 மகரம்
05.07.2015 முதல் 02.08.2016 வரை 


மகரம் ; உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதங்கள்
எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே! குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் குரு 3,12க்கு அதிபதியாகி 8ல் இருப்பதாலும், சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு 2,4,12ஆம் வீடுகளை பார்வை செய்வதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 8&ல் சஞ்சரிப்பதால் பணம்  கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது. வரும் 08.01.2016 முதல் கேது 2&ஆம் வீட்டிலும் ராகு 8&ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர் கொண்டே முன்னேற்ற அடைய முடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

குடும்பப் பொருளாதார நிலை
குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். 

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

உத்தியோகம்
பணியில் வேலை பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலை பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்

அரசியல்
மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமல் இருப்பது உத்தமம்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கானப் பலனை பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய பெறுவதில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

கலைஞர்களுக்கு
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிக்கேற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார்,பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய  சூழ்நிலைகள் ஏற்படும். சனி பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு முன்னேற்றமானப் பலன்களை பெற்று விடுவீர்கள். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் தேக்க நிலை இல்லாமல் தொழில் செய்ய இயலும். பயணங்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் ஜென்ம ராசிக்கு 3&ல் கேது சஞ்சரிப்பதால் எதிர் பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் வேலை பளுவை குறைக்க உதவும். சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு முன்னேற்றப் பலன்களை அடையலாம். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். 08.01.2016 முதல் கேது 2லும், ராகு 8லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் கெடுபிடிகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 9ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் உணடாவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். பொன் பொருள் சேரும். வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.  எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனு சரித்து செல்வதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல வகையான பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றிப் பெற முடியும். 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியான தடைகள் விலகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமும் கிட்டும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் நினைத்ததை நிறைவேற்ற சில தடைகள் உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும்  குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் லாபமளிப்பதாகவே அமையும். தொழில் வியாபாரம் செய்யவர்கள் போட்டி பொறாமைகளை சந்தித்து முன்னேற்றமடைய முடியும். லாபங்கள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
இக்காலங்களில் குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் ஒரளவுக்கு நன்மை தீமை கலந்த பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சில நேரங்களில் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் தோன்றினாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன்படுத்தாதிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாகவே இருக்கும்.

உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள்
நல்ல மன வலிமையும் வைராக்கியமும், செய்நன்றி மறவா குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.

திருவோணம்
உதவும் மனபக்குவமும் யார் மனதையும் புண்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் 1,2, ஆம் பாதங்கள்
அடுத்தவர் உதவியை எதிர் பாராமல் சொந்த முயற்சியால் முன்னேறும் உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 8ல் சஞ்சரிப்பதால் பணவரவில் நெருக்கடிகள் உண்டாகும் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு வெற்றி கிட்டும். சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   4, 5,6,7
கிழமை  சனி, புதன்
திசை   மேற்கு
நிறம்   நீலம், பச்சை
கல்    நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும். 08.01.2016 முதல் சர்ப கிரகங்களான கேது 2&லும் ராகு 8&லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது நல்லது. துர்கைவழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: