Friday, January 16, 2015

ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு




சென்னை புத்தக கண்காட்சியில் தற்போது நான்

 எழுதிய 

திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்

 மற்றும் 

காலமெல்லாம் நோயின்றி வாழ 

ஜோதிட மருத்துவம் 

ஆகிய இரு புத்தகங்களும் புதிதாக

 வெளிவந்துள்ளது










மாபெரும் வெற்றி 
  
10 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி. 

2011 ஜீலையில் தொடங்கி தற்போது 700 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 10  லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.  அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.


அன்புடன்
முருகுபாலமுருகன்




காணத்தவறாதீர், 

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு


கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்கு உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாழம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திற்கு 7 ஆம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2 ஆம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7 ஆம் அதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7 ஆம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.

ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்கு வகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில்  அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த வித சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் 7&ஆமதிபதி எவ்வளவு கிரகளுடன் கூடியிருந்தாலும் 7 ஆம் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் ஒரே திருமணம் தான் நடைபெறும்.

பொதுவாக 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும்  கூடி ஒருவரின் ஜாதகத்தில்  எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை  இல்லாமல் இருப்பது நல்லது.

ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7 இல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7 ஆம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.

இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும். 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA




No comments: