வாங்கி படிக்க தவறாதீர்கள்
அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்
(திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு
அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்
(திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு

அன்புள்ள வாசக பெருமக்களே!
எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091&7200163001.9383763001.
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091&7200163001.9383763001.





அக்டோபர் மாத பலன்கள் 2014
கணித்தவர்
ஜோதிட மாமணி, ஜோதிட இளவரசர்
முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
போன்- 044-24881038,24839532.
செல் 0091 - 7200163001. 9383763001,
மேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே தங்களுடைய பேச்சாற்றலால் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தனமான 6-இல் சூரியனும்; ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில லாபமும் அனுகூலமும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.; குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். தனவரவுகள் பல வழிகளில் வந்து குவியும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாக்கும். புத்திர வழியில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக விலகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறந்த லாபம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் நல்ல அனுகூலம் உண்டாகும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் பெயர் புகழ் உயரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு தடைப்பட்ட நிலுவைதொகை அனைத்தையும் பெறுவார்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
பரிகாரம்;;;; செவ்வாய்கிழமை தோறும் முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது;;.
சந்திராஷ்டமம் 25.10.2014 இரவு 11.21 மணி முதல் 28.10.2014 காலை 05.07 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசிக்கு 6-ல் சனியும் 11-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் ; தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். தாராள தன வரவுகளால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 5ல் ராகு இருப்பது புத்திர வழியில் வீண் சஞ்சலங்களை உண்டாக்கும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. வெளிவட்டார தொடர்புகளால் சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளால் மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.
பரிகாரம் தொடர்ந்து குரு ப்பீரிதி தட்சிணா மூத்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 28.10.2014 காலை 05.07 மணி முதல் 30.10.2014 காலை 09.12 மணி வரை.
.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்ப+சம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றலால்; சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குருவும்ருண Nhரக ஸ்மானமான 6-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் மனகுழப்பம் சோர்வு உண்டானாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலனையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலின் மூலம் சாதகமான நற்பலன்கள் கிட்டும். பொருளாதார நிலையில் இருந்த பிரச்சினைகள் விலகி சிறப்பான முன்னேற்றதம் உண்டாகும். கடந்த கால சோதனைகளும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்; பார்க்கும் உயர்வவுகள் கிடைக்கும்.;. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.10.2014 அதிகாலை 03.30 மணிமுதல் 05.10.2013காலை 05.13 மணி வரை..30.10.2014 காலை 09.12மணி முதல் 01.11.2014 பகல் 12.07 மணி வரை.
கடகம். @ புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்ட உங்களுக்கு 3- ல் சூரியனும் மாதபிற்பாதியில் 6-ல்; செவ்வாயும் சஞ்சரிப்பதால்
ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தாமதம் அடைந்தாலும் வேலை பளு குறைந்து காணப்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் குறையும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்கு பிறகு முன்னேற்றம் கொடுக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றுவதால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான நிலையில் இருந்தாலும் வீண் விரயங்களும் ஏற்படும்.
பரிகாரம் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி விழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 05.10.2013 காலை 05.13 மணி முதல் 07.10.2014 காலை 05.57 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்ர 1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனியும் மாத பிற் பாதியில் 3-ல் சூரியனும்சஞ்சாரம் செய்வதால் மேலும் மேலும் எல்லா வகையிலும் வெற்றிகள்; உண்டாகும். பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையும் உயரப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை நிலவும். பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்தும் போது மிகவும் கவனமுடன் செயல்; படுவது நல்லது. கலைஞர்;கள் வாய்ப்புகள் தேடி வருவதால் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவார்கள். அரசியல் வாதிகளின் பெயர், புகழ் உயர கூடும். மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பரிகாரம் சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.10.2014 காலை 05.57 மணி முதல் 09.10.2014 காலை 07.16 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் உங்களுக்கு ஜெனமராசிக்கு 3-ல் செவ்வாயும் 11-ல் குருவும் சஞ்சாரம் செய்வது பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் விலகி ஒற்றுமையும், மகிழ்ச்சியும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் கூடுதல் லாபம் உண்டாகும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 6-ல் சனி அமைந்திருப்பது புதிய முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கு தகுந்த உயர்வுகளையும், மேன்மைகளையும் பெறுவார்கள்.
பரிகாரம்.சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.10.2014 காலை 07.16 மணிமுதல் 11.10.2014 காலை 10.47 மணி வரை.
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ரூம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களேநேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும் 12-ல்சூரியன் ராகுவும் சஞ்சாரத் செய்வதால்நன்மை தீமை கலந்த பலன்களே உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். நெருங்கியவர்கள் இடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சனி சாதமற்று சஞ்சரிப்பதால்;; தொழில் வியாபார ரீதியாக எந்த எதிர்ப்புகள் சோதனைகள் வரும் என்றாலும் சமாளிக்கின்ற ஆற்றலை கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிடைக்கும.; உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளில் தவறாது நடந்து கொள்வது உத்தமம். பிறர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும்.
பரிகாரம் சனி பிரிதி ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 11.10.2014 காலை 10.47 மணிமுதல் 13.10.2014 மாலை 05.41 மணி வரை.
விருச்சிகம் விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே நியாய அநியாயங்களை தௌ;ளத் தெளிவாக பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது அற்;புதமான அமைப்பாகும்.குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தனவரவுகளில் சிறப்ப் முன்னேற்றம் உண்டாகும்.; புத்திர வழியில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் உண்டாக கூடிய்; சிறுசிறு பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான லாபத்தை அடைவார்கள். கூட்டாளிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும் கௌரவ பதவிகளை வகிக்கும் யோகம் அமையும். கலைஞர்களுக்கு பயணங்களால் அனுகூலங்கள்;; அதிகரிக்கும். படவாய்ப்புகள் சிறப்பாக அமையும்.;.
பரிகாரம்;;;; செவ்வாய்கிழமை தோறும் முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 13.10.2014 மாலை 05.41 மணி முதல் 16.10.2014 காலை 04.06 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம1 ஆம் பாதம்;
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன் சுக்கிரனும் 11-ல் சனி புதனும் சஞ்சாரம் செய்வதால்நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும். சுப காரிய முயற்சிகளில் சற்றே அனுகூலப்பலன் உண்டாகும். பொருளாதார நிலையில் தடைபட்ட பணவரவுகள் கிடைக்கப் பெறும். நண்பர்களும் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதப்படும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்ல பலனை உண்டாக்கும். உற்றார் உறவினர்களின் வருகை தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தினாலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கலைஞர்களுக்கு தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். நடித்த படங்கள் சுமாரான வசூலை உண்டாக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகும்.
பரிகாரம் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 16.10.2014 காலை 04.06 மணி முதல் 18.10.2014 மாலை 04.36 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் விரோதிகளானாலும் ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் பண்பு கொண்ட
உங்களுக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும் 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் மேன்மையான பலன்கள் உண்டர்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் அமையும். வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் யோகமும் அமையும். எதிர் பாராத தீடீர் தனவரவுகள் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம் செல்வாக்கு உயரும்.
பரிகாரம் சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.10.2014 மாலை 04.36 மணி முதல் 21.10.2014 காலை 04.56 மணி வரை.
கும்பம் அவிட்டம்3,4, சதயம்,பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட
உங்களுக்கு அட்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சுக்கிரன் ராகு சஞ்சாரம்செய்வதால்தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே அமையும். கூட்டாளிகளிடையே வீண் பிரச்சினைகள் உண்டாகும். புத்திரர்களால் வீண் செலவுகள் உண்டாகும். தன வரவுகளில் சிக்கலான நிலை நீடிக்கும். வரவேண்டிய பணம் கூட கைக்கு கிடைக்காமல் தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சல் உண்டாகும். அதிக உழைப்புகளால் உடல் நிலை சோர்வடையும்.; மருத்துவ செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்களும் அடிக்கடி பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடற்ற நிலையால் மதிப்பெண்கள் குறையும்.
பரிகாரம் துர்கைவழி பாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 21.10.2014 காலை 04.56 மணி முதல் 23.10.2014 மதியம் 15.22 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே நீங்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. உங்களுக்கு இம்மாதம் 5-ல் குருவும் 9-ல் செவ்வாயும்சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பாகும்.என்றாலும் 7-ல் சூரியன் சுக்கிரன் சஞ்சிப்பதால் உடல் நிலை சுமாராக அமையும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தோன்றி மறையும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகளும்; அதிகரிக்கும்.. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.;. புத்திரர்களால் மன மகிழச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றாலும் தேக்கமடையாது. தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.;. எதிரிகளின் பலம் அதிகரிக்க கூடிய காலம் என்பதாலும் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பதே சிறந்தது. மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை மேற் கொள்வது உத்தமம். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதால் மதிப்பெண்கள் குறையும்.
பரிகாரம் சனி ப்ரீதி. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 23.10.2014 மதியம் 15.22 மணி முதல் 25.10.2014 இரவு 11.21 மணி வரை.
அக்டோபர் சுபமுகூர்த்த நாட்கள்
06.10.2014 புரட்டாசி மாதம், 20 ஆம் தேதி திங்கட்கிழமை, திரயோதசி திதி, சதய நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை
13.10..2014 புரட்டாசி மாதம், 27 ஆம் தேதி திங்கட்கிழமை, சஷ்டி திதி, மிருகசிரிஷம நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் தேய்பிறை
30.10..2014 ஐப்பசி மாதம், 13 ஆம் தேதி வியாழக்கிழமை, சப்தமி திதி, உத்திராட நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில் காலை 07.30 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்;பிறை
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment