Tuesday, July 16, 2013

பலாபலன்களை வழங்கும் குஜவத் கேது சசிவத்ராகு

       
பலாபலன்களை வழங்கும் குஜவத் கேது சசிவத்ராகு 

     
நவகிரகங்கள் அனைத்திற்கும் சொந்த வீடு உண்டு குறிப்பாக நவக்கோள்களில் சாயாகிரமான ராகு கேதுவுக்கு சொந்த வீடு கிடையாது. சூரியன் சந்திரனுக்கு ஒரு வீட்டு அதிபத்தியமும் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனிக்கு இரு வீட்டு அதிபத்தியமும் உண்டு. இந்த 7 கிரகங்களும் தங்களது திசா புத்தி காலங்களில் தங்களது வீட்டின் அதிபதிய பலா பலனை ஜாதகருக்கு தரும். ஆனால் ராகு கேதுவுக்கு சொந்த வீடு இல்லை என்பதால் அவர்கள்  எப்படி பலன்களை தருவார் என ஆராய்கின்ற போது பல்வேறு நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன.
     
குறிப்பாக ராகு கேது இருவரும் அவர்கள் எந்த வீட்டில் இருக்கின்றார்களோ அந்த வீட்டை தனது சொந்த வீடாக எடுத்துக் கொண்டு பலன்களை வழங்குவார்கள். அது மட்டும் இன்றி கேது பகவான் செவ்வாயைப் போலவும் ராகு பகவான் சனி பகவானை போலவும் பலன்களை வழங்குகிறார்கள். பொதுவாக பாவிகள் தங்களது திசா காலத்தில் தொடக்கத்தில் கெடு பலனும் சுய புக்திக்கு பிறகு ஏற்றத்தையும் உண்டாக்குவார்கள். பொதுவாக ஒரு பாவ கிரக திசையில் சுய புக்தி யோகத்தை தந்து விட்டால் அடுத்து வருகின்ற புக்தி காலங்களில் கண்டத்தை உண்டாக்கும் என்று பொது விதியும் உண்டு.
     
அது போல ராகு கேது சுய புக்தியில் கெடுதியும் பிற புக்தியில் நற்பலனையும் உண்டாக்கும். கரும்பாம்பு என வர்ணிக்கப்படும் ராகு பகவான் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரத்தில் அமையப் பெற்றால் யோகத்தை உண்டாக்கும். அது போல ராகு பகவான் சனியை போல யோகம் தருவார் என்ற நிலைப்படி மகர கும்ப லக்னங்களுக்கு ராகு பகவானும், கேது பகவான் செவ்வாயை போல பலன் தருவார் என்ற நிலைப்படி மேஷம் விருச்சிக லக்னத்திற்கு யோகத்தை தருவார். அது போல ராகு பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமையப் பெற்று திசை நடத்தினால் மட்டும் போதாது. அந்த ஜாதகத்தில் சனி பகவானும் பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.  அது போல கேது பகவான் திசா நடைபெறும் காலங்களில் நற்பலன் ஏற்பட வேண்டும் என்றால் செவ்வாயும் வலு இழக்காமல் இருக்க  வேண்டும். அப்படி அமையப் பெற்றால் தான் நற்பலன்களை ராகு கேது திசா புத்தி காலங்களில் அனுபவிக்க முடியும். அது போல ராகு கேது ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரி கோணாதிபதியின் சாரமும் நட்பு  கிரக சாரமும் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகும். ராகு கேது 6,8,12க்கு அதிபதிகளின் சாரமும் பாதகாதிபதிகளின் சாரமும் பெறுவது நல்லதல்ல.ராகு கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தாலும் நற்பலன் உண்டாகும்.

     ஆக சாயா கிரகங்கள் குஜவத் கேது சசிவத் ராகுவாக பலா பலன்களை வழங்குகிறார்கள்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com

No comments: