Friday, November 30, 2018

வார ராசிப்பலன் - டிசம்பர் 2 முதல் 8 வரை


வார ராசிப்பலன் - டிசம்பர் 2 முதல் 8 வரை
கார்த்திகை 16 முதல் 22 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி
சூரிய குரு புதன் (வ)
  சுக்கி
சந்தி

கிரக மாற்றம்
07-12-2018 புதன் வக்ர நிவர்த்தி அதிகாலை 2.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி              01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.
துலாம்            03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை.
விருச்சிகம்                05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.
தனுசு               08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.12.2018 கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.15 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் -   05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். அம்பாள் வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் -   08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றலாம். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் பேச்சில் மட்டும் சற்று நிதானத்துடன் இருந்து உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமதம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 6, 7.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 8.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 6, 7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 8.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் குரு புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6, 7.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8.
சந்திராஷ்டமம் -   01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெற்று கடந்த கால சோதனை எல்லாம் மறையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8.
சந்திராஷ்டமம் -   03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை.