Wednesday, May 22, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி


மீனம் பூரட்டாதி  4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


தெய்வ பக்தியும் நல்ல ஒழுக்கமும், தன் மானமும் மிக்கவராக விளக்கும் மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங் களை சந்திக்க வேண்டியிருக்கும். பண வரவுகளிலும் ஏற்ற இறக்கமாக நிலையிருப்பதால் முடிந்தவரை ஏற்ற இறக்கமான நிலையிருப்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்காலம். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகள ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும் பத்திலும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். குருபார்வை 8,10,12ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமை களுக்கேற்ற உயர்வுகள் சற்று தாமதப்பட் டாலும் பாராட்டுதல்கள் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளவேண்டிய வாய்ப்புகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.



முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்

நடத்தும்
மாபெரும்குருபெயர்ச்சியாகம்
ஜோதிடர்கள்மாநாடு
இடம்.ராஜாம்மாள்திருமணமண்டபம்
வடபழனி.சென்னை


குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


தேக ஆரோக்கியம் :

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக் கொண்டேதானிருக்கும். மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள பெரியவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தேவையற்ற அலைச்சல் டென்ன்களாலும் உடல்நிலை சோர்வடையும். சுகவாழ்வு பாதிக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களர் ஒற்றுமை குறையக் கூடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகளிலும் இழுபறி நிலையே நீடிக்கும். சேமிப்புகள் குறையும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளி களையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் மட்டுமே போட்ட முதலீட் டினை எடுக்கும் அளவிற்காவது லாபத்தைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது பணிபுரிவர்களே தட்டிச் சொல்வதால் மனநிம்மதி குறைவடையும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அலைச்சல் டென்ன் அதிகரிக்கும். என்றாலும எதையும் சமாளித்து முன்னேற்றமடையக்கூடிய வலிமையையும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

உடனிருப்பவர்களையும், பத்திகையாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்ளுவதால் பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும். பயணங்களால் வீண் சங்கடங்களை சந்திக்க கூடிய கணம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் தடைதாமங்கள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்க முழு நேரமும் பாடுபட வேண்டியிருக்கும். புழு பூச்சிக்களின் தொல்லைகளால் பயிர் விளைச் சல் பாதிப்படையும். பயிர்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளில் வீண் விரயங்களும் உண்டாகும்.  மனை வாய்க்கால் வரப்பு போன்றவற்றால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சோர்வு மந்தநிலை உண்டாக மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதில் இடை யூறுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அணைத்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் உண்டாகும்.

படிப்பு

மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாக கூடிய காலம் என்பதால் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஞாபகமறதி உண்டாகும். பயணங்களின் போது வேகத்தை குறைப்பது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது.

ஸ்பெகுலேன்
நெட்டரி, ரேஸ், ஷேர்  ோன்றவற்றில் வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதால் பணவியத்தில் கவனம் தேவை.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்;தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

உங்கள் ராசியாபதி குருகபவான் சுக ஸ்தானமான 4.ம் வீட்டில் தனபாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்தரத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவை களையும் பூர்த்தி செய்யமுடியும். சனிராகு 8.ல் சஞ்சரிப்பதாலும், கேது 2.இல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்ல வேண்டிவரும். முடிந்தவரை பிறர் வியங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்படிப்பது போன்றவற்iறின் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். தொழில் வியாபரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. பயணங்களின் போது வேத்தை குறைப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களின் வாழ்க்கை பதையை மாற்றக்கூடும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சகஸ்தானமான 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் பணவியங் களில் கவனமுடன் செயல்படுவது, கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்ற வற்றைத் தவிர்ப்பது நல்லது. 2.ல் கேதுவும், 8.ல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய காலமிது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சினை களை ஏற்படுத்தும். எந்தவொரு வியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்பாடது. உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்த்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை


குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு வியத் திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. திருணம சுபகாரியங்களாக எடுக்கும் முயற்சி களில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பா செயல்படமுடியாத அளவிற்கு மந்த நிலை உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் உண்டாக கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியாக செயல்படமுடியாத நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் சோர்வு நிலை ஏற்பட்டு அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2013 வரை

ஜென்ம ராசிக்கு 4.இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். எதிலும் தடை தாமதங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கும் மந்த நிலையே நிலவும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திக்க நேரிடும். வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடியகாலம் என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல் வது நல்லது. மாணவர்கள் சற்றே முன்னேற்றத்தை அடைவார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்ற அரும்பாடுபட வேண்டியிருக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த பயிர் விளைச்சால் பெற இயலாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாக செயல்பட இயலாத நிலை ஏற்படும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 4.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே சந்திக்க வேண்டியிருக்கும். 2.இல் கேதுவும் 8.இல் ராகுவும் சஞ்சரிப்பதும் சனி வக்ர கதியிலிருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உற்றால் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அபிவிருத்தி குறைவு போன்றவை உண்டாகும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற பணிகள் கிடைப்பதால் தாமதநிலை உண்டாகும். பணி புரிபவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, பத்திரிகை நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல்கள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். கேது ராகு 2..8.இல் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் மருத்து செலவுகளை ஏற்படுத்தும், உற்றார் உறவினர்களை ஆதரவுகளை பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்து கடன்களை ஒரளவுக்கு வசூலிக்க முடியும். 8.ல் சனி வக்ரகதியிலிருப்பதால் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். முடிந்தவரை பயணங்களில் கவனமுடனி ருத்தல் நல்லது. அரசியல்வாதிகளுக்கு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

பூரட்டாதி - 4ம் பாதம் : 

எல்லோரையம் அன்பாலேயே வசியம் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத் தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

உத்திரட்டாதி :

எந்த காரியத்திலும் நற்பலனையே பெற விரும்பும் உங்களுக்கு குருபகவான் 4.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ன்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணவரவு களில் ஏற்ற இறக்கமான நிலை நீடிக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 2.ல் கேதுவும. 8.ல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலுவுகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். பயணங்களில் கவனம் தேவை.

ரேவதி :

மற்றவர்களின் பேச்சிலேயே அவரது எண்ணங்களை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் சுகஸ் தானமான 4.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்ல, 2.இல் கேது வும் 8.இல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நற்பலனை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலை பளு கூடும்.

அதிர்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12
கிழமை - வியாழன். ஞாயிறு
திசை - வடகிழக்கு
நிறம் - மஞ்சள், சிவப்பு
கல் - புப ராகம்
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

பரிகாரம் :

குருபகவான் 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு தவறாமல் நெய்தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 8.இல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக் குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. 2.இல் கேதுவும் 8.இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்பது, தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி




மற்றவர்களுக்க உதவி செய்வதில் அதிக ஆர்பம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 2. 11க்கு அதிபதியான குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ம் வீட்டில் வரும் 28.5.2013 முதல்  சஞ்சாரம் செய்ய விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலைத்திருக்கும்.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மணமாகதவர்களுக்கு மணமாகும். சொந்த பூமிமனை வாங்கும் யோகமும்  பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின்  ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். கேது 3.இல் இருப்பதால் எடுக்கும் குருபார்வை ஜென்ம ராசிக்கும் 9,11.ஆம் இடங்களுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும் புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். கடனக்ள அனைத்தும் குறையும். சேமிப்புகள் பெருகும்.

முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பழைய சிக்கல்கள் கடங்கள் யாவும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்மும் உண்டாகும். மண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கரம் பிடித்து மகிழ்வர் பொருளாதார மேபாடுகளால் குடும்பத்திற்குத் தேவையான அதிநவீன பொருட்களை வாங்குவதுடன், புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் பல காரியங்களை சாதிக்க முடியும். கடன்கள் யாவும் குறையும்.

கொடுக்கல் வாங்கல் :

குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். பெபொது நல காரியங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள். பூர்வீக சொத்து வியங்களிலிருந்த வம்பு வழக்கு களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக் கும். சேமிப்புகளும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

செய்யும் தொழில் மேன்மையும் கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். புதிய புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்க முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பல கிளைகளை நிறுவக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலாளர்களின் ஆதரவு களால் எதையும் சிறப்பாக செய்த முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் திறம்பட செயல்பட்டு பல பரிசுகளையும், பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவீர்கள். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று அலைச்சல்களை குறைத்துக் கொள்ளமுடியும். புதிய வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற கல்விக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும் வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல் படுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

மக்களின் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த மாண்புமிகு பதவி களையும் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், பண வரவுகளும் மிக சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு கட்சி பணிகளுக்காக சென்றுவருவீர்கள். மதிப்பும் மதியாதையும் உயர்வடையும்.

விவசாயிகளுக்கு :

விவசாயகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பூமிமனை, அதிநவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். அரசுவழியில் பல நற்பலன்கள் உண்டாகும். வங்கி கடன்களும் கிடைக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் பெருகும். தேவையற்ற வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். ஆடை அணிகலன்கள் யாவும் சேரும். சிலருக்கு சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்ப தாக அமையும். புத்திரபாக்கியம் சிறப்பாக கிடைக்கும்.

படிப்பு :

மாணவ மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். நல்ல மதிப்பெண்களை பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்புகளால் பல சாதனைகளை செய்வீர்கள். கல்விக்காக சுற்றலா தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் அமையும். விளையாட்டு போட்டி களிலும் பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.

ஸ்பெகுலேன் :
ஷேர் ரேஸ், லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத வகையில் லாபங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் 3, 10.க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் பஞ்சமான ஸ்தான மான 5.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகம். பூர்வீகசொத்து வியங்களில் இருந்த வம்பு வழக்குகள் யாவும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். சிலர் சொந்த பூமி மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள் 3.ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி லாபம் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சிளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் அனைத்தையும் தடையின்றி பெறமுடியும். அரசியல்வாதிகளுக்கு பத்திரிகை நண்பர்களின் ஆதரவுகள் பெயர் புகழை உயர்த்த உதவும். துர்கை அம்மனை வழிபடு வது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ் சரிக்கும் இக்காலங்களும் பொற்காலங்களே! கேது மூன்றில் சஞ்சரிப்பதால் கிடைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பங்கள் நடை பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும. புத்தி ரர்களால் மனநிறைவு ஏற்படும். சொந்த பூமி மனை சேர்க்கையும் பூர்வீக சொத்துக் களால் லாபமும் உண்டாகும். பகைமை பாராட்டிய உறவினர்களும் நட்புகளும் காட்டு வார்கள். கணவன், மனைவியிடையேயும் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படமுடியும். சனியும் ராகுவும் 9.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றத்தைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வி யில் ஜொலிப்பார்கள். பள்ளி கல்லூரி களுக் கும் பெருமை உண்டாகும். விவசாயி களின் விளைச்சல்கள் யாவும் சிறப்பாக அமைந்து லாபமும் பெருகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொரளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சாரளமாக இருப்பதால் பல பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும் எளிதில் கொடுத்த கடன் களையும் வசூலிக்க முடியும். பொன்னும் பொருளும் சேரும். உடல் ஆரோக்கியத்திலும் புத்துணர்வும், தெம்பும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளையும் தடை யின்றிப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி யினைப் பெறமுடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங் களை பெறமுடியும். கௌரமானப் பதவி உயர்வுகளையும் பெற்று பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். அரசியல்வாதி களுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக் கும். மாணவர்களும் கல்வியில் பல சாதனை களை செய்வார்கள். வினாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். சொத்துக்கள் வாங்கும் வியத்தில் சற்று கவன முடனிருத்தல் நல்லது. கேது 3 லும் சனி ராகு 9 லும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார கதியாக மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கும். எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். விவசாயிகள் உழைப் பிற்கேற்ற பலனைப் பெற சற்றே பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வித் திறன் உயரும். அரசியல் வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப் பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியாகும். 9 இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர் களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற் பலனைப் பெறமுடியும். தொழில் வியா பாரத்தில் சில போட்டிகளை சந்திக்க வேண்டியிருப்பதாலும் கிடைக்க வேண்டிய லாபங் களும், வாய்ப்புகளும் தடையின்றி கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதிக நற்பலன்களை பெற முடியும். குடும் பத்திலும் மகிழ்ச்சித் தரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புத்திரவழியில் ப+ரிப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எல்லாவித பிரச்சினைகளும் விலகி குடும்பத் தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தடைப்பட் திருமண சுபகாரியமுயற்சிகளிலும் சாதகப் பலன் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றியிருப்பதால் ஆடை அணி கலன்களை வாங்கி சேர்ப்பீர்க்ள். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாப மளிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரித்தாலும்  வெளி வட்டாரத் தொடர்புள் சிறப்பாகவே இருக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும்  உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக கேது 3.இல் சஞ்சரிப்பதல் பலபெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தர்கள் உடன் பளுவை குறைத்துக் கொள்ளமுடியும். அரசியல்வாதிகளின் பெயர் புகழை உயர்த்தி கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

அவிட்டம் 3,4ம் பாதங்கள் :

நல்ல ஞாபக சக்தியும் எதிர்கால லட்சியங்களுக்காக உழைக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்ம ராசிக்கு 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொந்த பூமி மனை யாவும் சேரும். புத்திரபாக்கியமும் அமையும். தொழில் வியாபார ரீதியாகவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த உயர்வினை அடை வார்கள்.

சதயம் :

தன்னம்பிக்கையும், ஆத்ம பலமும் கொண்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பூர்வீக சொத்து வி~யங் களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்குவரும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பொன்னும் பொருளும் சேரும். சனி ராகு 9.இல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படமுடியும். கடன்கள் யாவும் குறையும்.

பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள் :

நேர்மையும், ஒழுக்கமும் சிறப்பானதாக கருதி வாழும் உங்களுக்கு பணவரவுகள் சரளமாக இருக்கும். மண வயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறமுடியும். தொழில் வியா பாரமும் சிறப்பாக நடைபெறும். கூட்டாளி களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்டம் அளிப்பவை

எண் - 5,6,8,14,15,17
கிழமை - வெள்ளி, சனி
திசை - மேற்கு
நிறம் - வெள்ளை, நீலம்
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

பரிகாரம் :

சனிபகவான் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.

குருப்பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசி


உத்திராடம் 2,3,4, திருவோணம் அவிட்டம் 1,2.ம் பாதங்கள்


நல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3.12.க்கு அதிபதியான குருபகவான் ருண ரோஸ்தான 6.ம் வீட்டில் வரும் 28.5.2013 முதல் சஞ்சாரம் செய்ய விருப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத் தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்ற குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி பகவான் 10.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். 4.இல் கேதுவும் 10.இல் ராகுவும் சஞ்சரிப்பதால் வீடு வாகனம் போன்றவற்றல் வீண் செலவுகள் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் குரு பார்வை 2,10,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். சகவாழ்பு சொகுவாழ்வு திருப்திகரமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படாது உடல் ஆரோக்கியமும் மேன்மை யடையும்.



முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006


தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக முடிக்க இயலாத நிலை உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களாலும் உடல் நிலை சோர்வடையும். சகவாழ்வில் பாதிப்பு உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலன் களை பெற முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை :

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாககூடிய காலம் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். எதையும் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் ஓரளவுக்கு ஆதாயங் களை பெற முடியும்.

கொடுக்கல் வாங்கல் :

குருபகவான் 6.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாரகத்தானிருக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது மற்றவருக்க முன் ஜாமீன் கொடுப் பதினாலும் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய துணி வார்கள். கொடுத்ததைக கேட்டால் அடுத்தது பகை என ஆகும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த வொரு புதிய முயற்சிகளிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டி பொறாமைகளை கண்கூடாக காண்பதால் எதையும் சமாளிக்கும் உங்களால் மறைமுக எதிர்ப்புகளால் உண்டாக கூடிய விரயங்களை சமாளிக்க முடியாமல் போகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கைகளிலும் எச்சரிக்கை தேவை. லாபம் சுமாராக தானிருக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :

உயரதிகாரிகளிடமும், உடன்பணிபுரிபவர்களிடும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் செய்து முடிக்கும் பணிகளுக்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வதால் சற்றே மன தளர்ச்சி உண்டாகும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்படுவதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பணியில் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் கடமையே கண்ணாக நினைத்து பணிபுரிந்தால் கிடைக்க வேண்டிய பெருமைகள் தானாகவே கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

மேடை பேச்சுகளில் நிதானத்தை கடை பிடிப்பது, பத்திரிகை நண்பர்களை அனுசரித்துச் செல்வது போன்றவற்றின் மூலம் உங்களின் பெயர் புகழுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். மக்களுக்கு கொடுத்த வாங்குறுதிகளை காப்பாற்ற முடியா மல் தடை தாமதங்கள் ஏற்படும். பதவிகளை காப்பற்றிக் கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நற்பலனை தரும்..

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லா விட்டாலும், போட்ட முதலீட்டினை எடுத்து விடக் கூடிய அளவிற்கு விளைச்சல் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாககூடும். புதிய நவீன கருவிகள் வாங்குவதால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும் கால் நடைகளால் சுமாரான லாபத்தைப் பெற முடியும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமிது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சில தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக்கு குறையிருக்காது உற்றார் உறவினர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். முடிந்தவரை பிறர் வியங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும்.

படிப்பு :

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலையே இருக்கும். படித்ததை மனதில் வைத்துக் கொள்ள இயலாது அளவிற்கு மந்தநிலை, ஞாபகமறதி உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை அவ்வளவாக எதிர்பார்க்க இயலாது. அரசுவழியில் சிறுசிறு உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ஸ்பெகுலேன் :
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தனவரவு சுமாராக இருக்கும்.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.5.2013 வரை

உங்கள் ஜென்ம ராசிக்கு 3.12.க்கு அதிபதியான குருபகவான் ருண ரோகஸ்தான மான 6.ஆம் வீட்டில் தன் நட்புகரமான செவ்வாயின் நட்சத்திரத்தல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் ஓரளவக்கு பூர்த்தியாகும். செவ்வாய் 4.11.க்கு அதிபதி என்பதால் தேவையற்ற அலைச்சல்களும் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். 10.இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபங்களை பெறமுடியாமல் மந்த நிலை ஏற்படும் என்றாலும், பொருட்தேக்கமின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். எதிர்பார்க்கும் உயர்வு கள் சற்று தாமதப்படும். அரசியல்வாதிகள் தங்கள் பெயர் புகழை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு மக்களின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெறமுடியும், குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, மந்தநிலை, சோர்வு போன்றவை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுபாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். சனி 10.அல் சஞ்சரிப்பதால் பணி புரிபவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வதால் மனநிம்மதி குறைத்துக் கொள்ளமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் பிரச்சினைகள், மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் உண்டாகும். வேலையாட்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க இயலாத அளவிற்கு நெருக்கடிகள் உண்டாகும்.  எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் மேடை பேச்சுக் களில் நிதானத்தை கடைப்பிடிப்பது, பத்திரகை நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 6.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும், நண்பர்களும் துரோகம் செய்யத் துணிவார்கள். எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உற்றால் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதை சற்று தள்ளிவைப்பது நல்லது. கணவன், மனைவி டையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் வியங்களில் கவனம் தேவை. சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் வீண் விரயங்களை சந்திப்பார்கள். சனியும் ராகுவும் 10.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு வீண் போட்டிகள் அதிகரிக்கும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விவசாயிகளுக்கு விளைச் சல் சுமாராகத்தானிருக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

ருணரோக ஸ்தானமான 6.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகளும் விலகி மணமாகாதவர்களுக்கு மணமாகும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும் ஆடை அணிகலன்களும் சேரும்.  புத்திரவழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள்யாவும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். சனி ராகு 10.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இதனால் தேவையற்ற மனசஞ்சரங்களும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் மந்த நிலை ஏற்படும். அபிவிருத்தியை பெருக்குவதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடுமுடியாமல் போகும். கடன்களும் உண்டாகும். ராகுகாலங்களில் துர்க்கையை வழிபடவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் மீண்டும் திருவாதிரை நட்சத்திரத்தில் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபகாரியத் தடைகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் ஏற்பட்டாலும் 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் ஒரளவுக்குப் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிப்பது நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றின் மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப் பதன் மூலம் கடன்களின்றி தப்பிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றில் மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ளமுடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்களின்றி தப்பிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை விலகும். போட்டிலகள் நிலவினாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். அரசியல்வாதிகளால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தல் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 6.ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற வேண்டியிருக்கும். 10.இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்தநெருக்கடிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர் புடைய வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் கூடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அதற்கேற்ற பாராட்டுதல்களையும், உயர்வுகளையும் பெறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் வியத்தில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கலலூரிகளுக்கு பெருமை சேர்க்க முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள் :

எந்த காரியத்திலும் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் ருணரோக ஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும். எந்தவொருகாரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நல் பலனைப் பெறமுடியும். சனியும் ராகுவும் 10.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. சேமிக்க முடியாது. உறவினர்களை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும்.

திருவோணம் :

அமைதியான குணமும் கடவுள் பக்தியும் அதிகம் கொண்ட உங்களுக்கு குருபகவான் ருண ரோகஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களையும் குடும்பதிலுள்ளவர்களையும் அனுசரித்து நடந்துக்கொண்டால் அனுசுலமானப் பலனைப் பெறமுடியும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவு களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் உடன்பணிபுரிபவர்களை அனு சரித்து செல்வதும் நல்லது. தொழில் வியா பாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2.ம் பாதங்கள் :

மற்றவருக்கு உதவிகள் செய்வதில் அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு குருபகவான் 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே பிரச்சினையை உண்டாக்கும். சனி ராகு 10.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். கூட்டாளிகளிடையே பிரச்சினைகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, மற்ற வரை அனுசரித்து நடந்துகொள்வது போன்ற வற்றால் நற்பலன் உண்டாகும்.


அதிர்டம் அளிப்பவை

எண் - 8,5,6,17,14,15
கிழமை - சனி, புதன்
திசை - மேற்கு
நிறம் - நீலம், பச்சை
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

பரிகாரம் :

குருபகவான் ருணரோக ஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி 10.இல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.