Saturday, June 5, 2021

Today rasi palan – 06-06-2021

 

Today rasi palan – 06-06-2021

இன்றைய ராசிப்பலன் -  06-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

06-06-2021, வைகாசி 23, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 02.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 02.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

சந்தி

சூரிய ராகு புதன்(வ) 

சுக்கி

குரு

திருக்கணித கிரக நிலை

06.06.2021

செவ்

சனி (வ)

 

 

கேது

 

 

இன்றைய ராசிப்பலன் -  06.06.2021

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

சிம்மம்

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று நீங்கள் சோர்வுடன் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் கவனம் தேவை. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடரும். கடன் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரித்தாலும் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

No comments: