Saturday, June 26, 2021

வார ராசிப்பலன் - ஜுன் 27 முதல் ஜுலை 3 வரை 2021

 

வார ராசிப்பலன் - ஜுன் 27 முதல் ஜுலை 3 வரை 2021

ஆனி 13 முதல் 19 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

புதன்  ராகு

சூரிய

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

 

செவ் சுக்கி

சனி (வ)

சந்தி

 

 

கேது

 

 

 

கிரக மாற்றம் இல்லை

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்          26-06-2021 காலை 09.55 மணி முதல் 28-06-2021 பகல் 12.59 மணி வரை.

கும்பம்         28-06-2021 பகல் 12.59 மணி முதல் 30-06-2021 இரவு 07.43 மணி வரை.

மீனம்            30-06-2021 இரவு 07.43 மணி முதல் 03-07-2021 காலை 06.13 மணி வரை.

மேஷம்         03-07-2021 காலை 06.13 மணி முதல் 05-07-2021 மாலை 06.59 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.06.2021 ஆனி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

 

28.06.2021 ஆனி 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

 

01.07.2021 ஆனி 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       27, 28, 29, 30.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறு தடை தாமதத்திற்கு பின் நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை தடையின்றி செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்கும் பின் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் -           28, 29, 30, 1, 2.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.  பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற  பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமதம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       1, 2, 3.

சந்திராஷ்டமம் - 26-06-2021 காலை 09.55 மணி முதல் 28-06-2021 பகல் 12.59 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் புதன், ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் -                       27, 3.

சந்திராஷ்டமம் - 28-06-2021 பகல் 12.59 மணி முதல் 30-06-2021 இரவு 07.43 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் ராகு, புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 28, 29.

சந்திராஷ்டமம் - 30-06-2021 இரவு 07.43 மணி முதல் 03-07-2021 காலை 06.13 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். துர்கை வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                       28, 29, 30, 1, 2.

சந்திராஷ்டமம் - 03-07-2021 காலை 06.13 மணி முதல் 05-07-2021 மாலை 06.59 மணி வரை.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி 4-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் அசதி, அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். துர்கை வழிபாடு மற்றும் சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       1, 2, 3.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மேன்மையடையும் என்றாலும் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது.  கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடையலாம். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       27, 28, 3.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       28, 29, 30.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் விலகி வளமான பலன்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். முருக வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் -                       27, 28, 1, 2.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும் என்றாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           28, 29, 30, 3.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருக பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           27, 28, 1, 2.

No comments: