Tuesday, April 30, 2019

2019- மே மாத ராசிப்பலன்


2019- மே மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


புதன் சுக்கி
சூரிய
செவ்
ராகு

திருக்கணித கிரக நிலை


 

கேது சனி(வ)
குரு(வ)



கிரக   மாற்றம்
03-05-2019 மேஷத்தில் புதன் மாலை 05.03 மணிக்கு
07-05-2019 மிதுனத்தில் செவ்வாய் காலை 06.53 மணிக்கு
10-05-2019 மேஷத்தில் சுக்கிரன் இரவு 07.06 மணிக்கு
15-05-2019 ரிஷபத்தில் சூரியன் பகல் 11.01 மணிக்கு
18-05-2019 ரிஷபத்தில் புதன் இரவு 11.35 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் ராசியதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காமல் இருப்பது, மற்றவர்கள் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும்.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்களின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் -  18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பணவரவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்- தடங்கல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம் -  21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.
பரிகாரம் -  ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
சந்திராஷ்டமம் -  23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மனகுழப்பங்கள் நீங்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10,11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அனுகூலமும் உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க நினைக்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தி அதிக லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.
சந்திராஷ்டமம் -  28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை மற்றும் 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.
பரிகாரம் -  ஆறுமுக கடவுளாம் முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அற்புதமான அமைப்பாகும். தொழில் உத்தியோகத்தில்  அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணம் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும் 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.
பரிகாரம் -  வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்படுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை மற்றும் 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.
பரிகாரம் -  சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும், பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதாலும் சிறப்பான பலன்களை அடைய முடியும்.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வரும் 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7,8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திராஷ்டமம் - 05-05-2019 இரவு 10.30 மணி முதல் 08-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.
பரிகாரம் -  லட்சுமி தேவி வழிபாடு மேற்கொள்வது, ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்திற்கு சென்று முருக கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு அனுகூலங்களை உண்டாக்கும் நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது நல்ல பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகளாலும் எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.  வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடுதல் முயற்சி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.
பரிகாரம் -  செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருக பெருமானை வணங்குவது, கிருத்திகை மற்றும் சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அளிக்கும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே இம்மாதம் புதன், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சிறப்பான பணவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்காளலும் அனுகூலங்கள் உண்டாகும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம் - 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.
பரிகாரம் -  சனி பகவானை வழிபடுவதாலும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும் மனகவலைகள் நீங்கி இன்பம் உண்டாகும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றத்தை தரும் அனுகூலமான அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் லாபகரமான பலனை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
சந்திராஷ்டமம் - 12-05-2019 பகல் 11.53 மணி முதல் 14-05-2019 பகல் 02.30 மணி வரை.
பரிகாரம் -  சனி பகவான் வழிபாடு செய்வது, கருப்பு நிற வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு புதிய வாய்ப்புகளும் எதிர்பார்த்த உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - 14-05-2019 பகல் 02.30 மணி முதல் 16-05-2019 மாலை 04.58 மணி வரை.
பரிகாரம் -  செவ்வாய் கிழமைகளில் முருக வழிபாடும் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடும் செய்து வந்தால் நற்பலன்கள் உண்டாகும்.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால்  எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். குரு 9-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். சுக ஸ்தானமான 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - 16-05-2019 மாலை 04.58 மணி முதல் 18-05-2019 இரவு 08.30 மணி வரை.
பரிகாரம் -  சனி பகவான் வழிபாடு செய்வது, சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வ நிலை உயரும்.

சுப முகூர்த்த நாட்கள்
02.05.2019 சித்திரை 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

08.05.2019 சித்திரை 25 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

10.05.2019 சித்திரை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

16.05.2019 வைகாசி 02 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

17.05.2019 வைகாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்.

29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை