Thursday, July 5, 2018

வார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை


வார ராசிப்பலன்
ஜுலை 8 முதல் 14 வரை 
ஆனி 24 முதல் 30 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


               
சந்தி

சூரிய

திருக்கணித கிரக நிலை

ராகு புதன்
கேது
செவ்(வ)
சுக்கி
சனி (வ)
 
குரு (வ)


கிரக மாற்றம்
10-07-2018 குரு வக்ரம் முடிவு இரவு 11.18 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்                           07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.
ரிஷபம்                           09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.
மிதுனம்                         11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.
கடகம்                              13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
11.07.2018 ஆனி 27 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டா-கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 12, 13.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. சிறப்பான பொருளாதாரத்தால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த படி புதிய வேலை வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய அதிக முயற்சி தேவை. சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் 2-ல் ராகு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். வரும் 10-ஆம் தேதி முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் விலகி ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட கைகூட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். இதுவரை இருந்த மந்த நிலை விலகி எதிர்பார்த்த லாபம் கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 11, 12.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும் என்பதால் முடிந்த வரை பயணங்களை குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது-. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்து விடுவது உத்தமம். சிவ ஸ்தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 8 ,9, 10, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அபிவிருத்தி பெருகுவதோடு எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் மகிழ்வார்கள். திருமண முயற்சிகள் நல்ல பலனைத் தரும். சகோதர சகோதரிகள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் சுபிட்சங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவார்கள். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய இடம் மனை வாங்கும் வாய்ப்பு அமையும். ஆடம்பர பொருட் சேர்க்கை அதிகமாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் சுமூகமான முடிவுக்கு வந்து நல்ல பலனை தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடையலாம். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் சனிக்கவசம் படிப்பதாலும் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.
சந்திராஷ்டமம் -     07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரித்தாலும் 10-ல் புதன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். குடும்பத்தினரின் உதவியுடன் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகளை உண்டாக்காது. பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 13, 14.
சந்திராஷ்டமம் -   09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பெறாமைகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போக கூடிய சூழ்நிலை உருவாகலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால் சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வந்தால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10,
சந்திராஷ்டமம் -   11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் வரும் 10-ஆம் தேதி முதல் ராசியதிபதி குரு வக்ர நிவர்த்தி அடைவதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்திலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளி இடங்களிலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பணவரவு தாராளமாக இருப்பதால் பழைய கடன்கள் தீர்ந்து போகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி தேவை. சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் -   13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலப் பலனை அடைவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். மஹா லக்ஷ்மி வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் திறன் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 10-ஆம் தேதி முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதும் சிறப்பாகும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. இதுவரை தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கௌரவமான பதவிகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்து வழியில் நற்பலன் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில் வியாபாரம் விரிவடையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரையும் முருக கடவுளையும் வணங்குவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 13, 14.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணவரவுகள் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படலாம். சிலருக்கு வீடு வாகனம், போன்றவற்றால் வீண் விரயம் ஏற்படக் கூடும். கொடுக்க- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க கூடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனவேதனையை உண்டாக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14.

No comments: