Wednesday, July 18, 2018

வார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை


வார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை 
ஆடி 6 முதல் 12 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






               
திருக்கணித கிரக நிலை

சூரிய புதன் ராகு
கேது
செவ் (வ)
சுக்கி
சனி (வ)
  சந்தி
குரு    


கிரக மாற்றம்
26-07-2018 புதன் வக்ரம் ஆரம்பம் 10.33 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம்      22-07-2018 அதிகாலை 04.14 மணி முதல் 24-07-2018 மதியம் 03.25 மணி வரை.
தனுசு                  24-07-2018 மதியம் 03.25 மணி முதல் 27-07-2018 அதிகாலை 04.11 மணி வரை.
மகரம்                 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும், 5-ல் சுக்கிரன் 7-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        27, 28.
சந்திராஷ்டமம் -         22-07-2018 அதிகாலை 04.14 மணி முதல் 24-07-2018 மதியம் 03.25 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவியிடையே  ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது, தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்யலாம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23.
சந்திராஷ்டமம் -         24-07-2018 மதியம் 03.25 மணி முதல் 27-07-2018 அதிகாலை 04.11 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வீண் வாக்குவாதங்கள் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக இருப்பதும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். குரு 5-ல் பலமாக இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கினால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 25, 26.
சந்திராஷ்டமம் -         27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், ராகு 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். முருக வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        25, 26, 27, 28.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மை, எதிர்ப்புகள் மறைந்த ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். சூரியன், ராகு இணைந்து 12-ல் இருப்பதால் வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        27, 28.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். 2-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வளமான பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சூரிய வழிபாடு சனிபகவான் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 27, 28.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. 2-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.  சிறப்பான பண வரவால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -24, 25, 26.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, வீண் விரயங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் தாமதப்படும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனையும் முருக கடவுளையும் வணங்கினால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 27, 28.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. தினமும் விநாயகரை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும், தன்னம்பிக்கையும், உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன் 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எந்த சிக்கலையும் சமாளித்து வெற்றி பெறும் ஆற்றலை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27, 28.


No comments: