Sunday, July 1, 2018

2018- ஜுலை மாத ராசிப்பலன்


2018- ஜுலை மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





சூரிய


திருக்கணித கிரக நிலை

ராகு சுக்கி புதன்
கேது செவ் ()

சனி ()
  
குரு ()


கிரக   மாற்றம்
05-07-2018 - சிம்மத்தில் சுக்கிரன்
11-07-208 - குரு () நிவர்த்தி
16-07-2018 - கடகத்தில் சூரியன்
26-07-2018 - புதன் () ஆரம்பம்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். வரும் 11-ஆம் தேதி முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம் - ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           -- 22-07-2018 அதிகாலை 04.14 மணி முதல் 24-07-2018 மதியம் 03.25 மணி வரை.


ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் அபிவிருத்தி பெருகி லாபங்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் - சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்           -- 24-07-2018 மதியம் 03.25 மணி முதல் 27-07-2018 அதிகாலை 04.11 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திரர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபாடு செய்வதும், முருக வழிபாடு செய்வதும் முன்னேற்றங்களை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           -- 29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை மற்றும் 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கைகால் அசதி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை போன்றவை ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

பரிகாரம் - சிவ பெருமானை வழிபாடு செய்வதாலும், துர்கையம்மனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்வதாலும் மேன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை மற்றும் 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகாலை 05.00 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே ராசியதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வரும் 11-ஆம் தேதி முதல் 2-ல் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் - சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம்           -- 07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி 10-ல் புதன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபடுவதும், ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதன் மூலம் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 2-ல் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியை தரும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும், எந்த விஷயத்திலும் நிதானமாக இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் லாபத்தை அடையலாம். வியாபார விஷயமாக அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்.

பரிகாரம் -        வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபடுவதும், சிவ பெருமானை வழிபடுவதும் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்           -- 11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு வரும் 11-ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இதுவரை இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் -        பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதும் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.
சந்திராஷ்டமம்           -- 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் புதன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.

பரிகாரம் - சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சந்திராஷ்டமம்           -- 15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் - முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும் காரிய சித்தி உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மாத பிற்பாதியில் மனநிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.  கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப் பெற்று குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும்.

பரிகாரம் - துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுவதும் சிவ வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

சந்திராஷ்டமம்           -- 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.07.2018 ஆனி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

02.07.2018 ஆனி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

05.07.2018 ஆனி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

11.07.2018 ஆனி 27 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

19.07.2018 ஆடி 03 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

30.07.2018 ஆடி 14 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

No comments: