வாங்கி படிக்க தவறாதீர்கள்
நவம்பர் 2015
ஓம்சரவணபவா இதழுடன்
2016 புத்தாண்டு பலன்கள்
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
சந்திராஷ்டமம்,சுப முகூர்த்த நாட்கள்அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)
இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
------------------------------------
காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
மாத ராசிப்பலன்- நவம்பர் - 2015 & சுப முகூர்த்த நாட்கள்
மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் குரு சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 12.11.2015 காலை 09.11 மணி முதல் 14.11.2015 மாலை 06.44 மணி வரை.
ரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது சஞ்சாரம் செய்வதும் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் ஓருளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல் படுவது, கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகளுக்குப்பின் தான் லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளால் வூண் பிரச்சனைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.11.2015 மாலை 06.44 மணி முதல் 17.11.2015 அதிகாலை02.11 மணி வரை.
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் 6&ல் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்
பரிகாரம். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 17.11.2015 அதிகாலை02.11 மணி முதல் 19.11.2015 காலை 07.33 மணி வரை.
கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4&ல் ராகு சஞ்சாரம் செய்வது தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை ஏற்படுத்தும் என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டிட நிரப்பும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 19.11.2015 காலை 07.33 மணி முதல் 21.11.2015 காலை 10.48 மணி வரை.
சிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியில் குரு, 4ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய சிறு சிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.11.2015 காலை 10.48 மணி முதல்23.11.2015 மதியம் 12.07 மணி வரை
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனி, மாத பிற்பாதியில் 6&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ணூணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் உற்றார் உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்க்கும் இட மாற்றங்களும் கிடைக்கும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.11.2015 மதியம் 12.07 மணி முதல் 25.11.2015 மதியம் 01.04 மணி வரை.
துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்வது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் அமையும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி சற்று விட்டு கொடுத்த நடப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 25.11.2015 மதியம் 01.04 மணி முதல் 27.11.2015 மதியம் 02.50 மணி வரை.
விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும், 12&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் நில தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். கூட்டாளிகளின் ஆதரவற்ற செயல்படுகளால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன் மனைவி சற்று விட்டு கோடுத்த செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 27.11.2015 மதியம் 02.50 மணி முதல் 29.11.2015 இரவு 07.27 மணிவரை.
தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு மாத முற்பாதியில் சூரியன் 11&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 02.11.2015 காலை 10.11 மணி முதல் 04.11.2015 இரவு 08.03 மணி வரை.
மற்றும் 29.11.2015 இரவு 07.27 மணி முதல் 02.12.2015 அதிகாலை 04.01 மணி வரை
மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், சனி லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 04.11.2015 இரவு 08.03 மணி முதல் 07.11.2015 காலை 08.39 மணி வரை.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ல் குருவும் 9ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.
பரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.11.2015 காலை 08.39 மணி முதல் 09.11.2015 இரவு 09.37 மணி வரை.
மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 6ல் குருவும், 7ல் ராகுவும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். நண்பர்களும் விரோதிகளாவார்கள். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.11.2015 இரவு 09.37 மணி முதல் 12.11.2015 காலை 09.11 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
02.11.2015 ஐப்பசி மாதம், 16 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி, புனர்பூச நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் தேய்பிறை
08.11.2015 ஐப்பசி மாதம், 22 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, துவாதசி திதி, அஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம் தேய்பிறை
09.11.2015 ஐப்பசி மாதம், 23 ஆம் தேதி திங்கட்கிழமை, திரயோதசி திதி, அஸ்த நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் தேய்பிறை
13.11.2015 ஐப்பசி மாதம், 27 ஆம் தேதி வெள்ளிகிழமை, துவிதியை திதி, அனுஷ நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம் வளர்பிறை
15.11.2015 ஐப்பசி மாதம், 29 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, சதுர்தசி திதி, மூல நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம் வளர்பிறை
18.11.2015 கார்த்திகை 02 ஆம் தேதி புதன் கிழமை சப்தமிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை
22.11.2015 கார்த்திகை 06 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஏகாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை
23.11.2015 கார்த்திகை 07 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை
27.11.2015 கார்த்திகை 11 ஆம் தேதி வெள்ளிகிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.
29.11.2015 கார்த்திகை 13 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை.
Contact
For your consultation
please contact my postal address
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
or
No comments:
Post a Comment