Wednesday, April 30, 2014

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கடகம்

குரு பெயர்ச்சி பலன்  2014 - 2015 

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

     நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணம் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றலும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

     பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொடுக்கல் வாங்கல்

     பணவரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

     பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

     பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது.

பெண்களுக்கு

     உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

     கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

ஸ்பெகுலேஷன்

     லாட்டரி ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை கவனமுடன் ஈடுபடுத்துவது நல்லது.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது மட்டுமின்றி 4&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு 7&ஆம் அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 21.06.2014 இல் ஏற்பட்ட சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு கை கால் அசதி, மூட்டுக்களில் வலி போன்றவை உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் விரயயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். சனி  4&இல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால்  வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் இக்காலங்களில் அதிகாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2&இல் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சனி 4&இல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் ராகு 3&இல் இருப்பது சிறப்பு என்பதால் எதையும் எதிர் கொள்வீர்கள். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும்  ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 5&இல் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர் பாராத வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். 5&இல் சனி சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் உறவினர்களிடையே பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் நலமுடன் அமைய மாட்டார்கள். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை

     குரு பகவான் விரயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி குறைவு உண்டாகும். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம் 4 ம் பாதம்

     பொய் பேசாத குணமும் நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடியே நிலவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சொந்த பூமி மனை போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கடன்கள் படிப்படியாக குறைவடையும்.

பூசம்

     எந்த வித பிரச்சனைகளிலும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் தோன்றும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெறும்.

ஆயில்யம்

     சகலவித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆர்வம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான நிலைகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண்   1,2,3,9,10,11,12,18
நிறம்   வெள்ளை, சிவப்பு
கிழமை    திங்கள், வியாழன்
கல்   முத்து
திசை   வடகிழக்கு
தெய்வம்   வெங்கடாசலபதி

பரிகாரம்

     கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது. வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டை  கடலை மாலை சாற்றி நெற் தீப மேற்றவது நல்லது. சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Monday, April 28, 2014

குரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;

குரு பெயர்ச்சி பலன்  2014-2015 மிதுனம் ;

 மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்

     பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில்  13.06.2014 முதல் 5.07.2015 வரை உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.  16.12.2014 முதல் சனி பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை 

     குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்

     பொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

     பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

அரசியல்வாதிகளுக்கு

     பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள்.  மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்களுக்கு

     உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்வீர்கள். சேமிப்பும் பெருகும்.

படிப்பு

     நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்

     ஷேர், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை காண முடியும்.

குரு பகவான் புனர் பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்திரல் ஜென்ம ராசிக்கு 2இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் தன ஸ்தானமான 2இல் ராசியாதியாதியின் சாரத்தில் அமைந்திருக்கும். இக்காலங்களிலும் மேன்மையானப் பலன்களே உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால்  நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் சனியும் 5இல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கு கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும்.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015  முதல் 05.07.2015 வரை

     குரு பகவான் ராசியாதிபதி புதனின் நட்சததிரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகளை கொடுக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சனி பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்

     அதிகார குணமும் பிறரை அடக்கி ஆளும் சுபாவமும், நல்ல நிர்வாகத் திறமையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு  நல்ல உயர்வுகளும் லாபங்களும் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.

திருவாதிரை

     முன் கோபம் இருந்தாலும் அனைவரிடமும் தன்மையாகவே பழகும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் தடையின்றி பெற முடியும். கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும்.

புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்

      தான் கற்றதை பிறருக்கும் கற்றுரைக்கும் நற்குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  -5,6,8,14,15,17
நிறம்  -பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை-  வடக்கு 
தெய்வம் - விஷ்ணு

பரிகாரம்

     மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 16.12.2014 வரை 5& ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்யவது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யல

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


குரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்  2014 - 2015 ரிஷபம் 

ரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
     
எப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! 13.06.2014 முதல் 5.7.2015 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் முற்பாதிவரை 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. 21.06.2014 முதல் ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனசஞ்சலம் தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பூர்வீக சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கேது பகவான் 11இல் சஞ்சரிப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கும் குறை இருக்காது. 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பார்வை சனிக்கு கிடைப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதப்படும்.

தேக ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
     கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.  கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     பயணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களின் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு
     மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு
     விளைச்சல் ஒரளவுக்கு தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல் படவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.

படிப்பு
     கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.  தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.

ஸ்பெகுலேஷன்
     லாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது என்றாலும் சனி 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ராகு 5இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். இதனால் பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் இக்காலங்களில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம்,  வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் சனி 6இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியால் சனி 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2014 வரை

     குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் எதிலும் உயர்வுகளைப் பெற முடியும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும் சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். 7&இல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற முடியும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைத் பெற முடியும்.தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நற்பலனைத் தரும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2014 முதல் 05.07.2014 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்கள் ஒரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்,

     முன் கோபம் அதிகம் இருந்தாலும் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். புத்திர வழியில் அடிக்கடி வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும்.

ரோகிணி

     விட்டுக் கொடுக்கும் குணமும், இனிமையாக பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படவும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களேத் துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.

மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்

     எந்த கஷ்டங்களையும் எளிதில் தாங்கும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்   5,6,8,14,15,17
நிறம்   வெண்மை, நீலம்
கிழமை   வெள்ளி, சனி
கல்   வைரம்
திசை   தென்கிழக்கு
தெய்வம்   விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்

     ரிஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. 21.6.2014 முதல் ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.  16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078



Sunday, April 27, 2014

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மேஷம்

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015  மேஷம்


மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை  1 ம் பாதம்

     எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு 4இல் 13.6.2014 முதல் 5.7.2015 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பகவான் தொடக்கத்தில் 7&ஆம் வீட்டிலும் பின்பு அஷ்டமஸ்தானத்திலும் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்& மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் 21.6.2014 முதல் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல் படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக கிடைக்கும்.

தேக ஆரோக்கியம்
தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் இதனால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல் நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிர் பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாராநிலை
     கணவன் மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும்.  பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது  பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரித்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     பணியில் நிம்மதியான நிலையிருக்கும் எதிலும் திறம் பட செயல்படுவீர்கள்-. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு
     மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

விவசாயிகளுக்கு 
     பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள திருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

படிப்பு
     மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

ஸ்பெகுலேஷன்
     லாட்டரி, ஷேர், ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.6.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4&இல் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். இது வரை ஜென்ம ராசியிலும் 7&லும் சஞ்சரித்த கேது ராகு 21.6.2014 முதல் மாறுதலாகி ராகு 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது சிறப்பாகும். மறைமுக எதிர்ப்புகள் சற்று விலகும்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4 இல் சஞ்சரிக்கும் இக் காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். 7&இல் சனி சஞ்சரிப்பதால் கணவன்-&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடலில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நல்ல வரன்கள் தட்டிப் போகும். 6&இல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 2.12.2014 வரை

     குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4&இல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சிந்திப்பீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை பளு குறைவாக இருக்கும். 

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
     குரு பகவான் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் அதிசாரமாக 5&ஆம் வீட்டில் இக்காலங்களில் சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பாகும். இதனால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்க் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு 2நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். 16.12.2014இல் சனி அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு 4&இல் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். இதுவும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை

     குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் சுகஸ்தானமான 4&இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை நிலவும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம்.

அஸ்வினி

     இந்த நட்சத்திரத்தின் அதிபதி ஞான காரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 4இல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பரணி

     இதன் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவரை கவரக் கூடிய அழகான உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 4&இல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுக வாழ்வு பாதிப்படையும் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை  1 ம் பாதம்

     இதன் அதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல உடல் அமைப்பும் புத்திசாலி தனமும் அதிகமிருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 4&இல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சேமிப்பு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் & 1,2,3,9,10,11,12
நிறம் & ஆழ்சிவப்பு
கிழமை & செவ்வாய்
கல்&பவளம்
திசை& தெற்கு
தெய்வம் & முருகன்

பரிகாரம்

     மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குரு ப்ரீதி, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனியும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் சனிக்கு பரிகாரம் செய்வது ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Thursday, April 24, 2014

Rahu Dasa By Murugu Balamurugan

Mars dasa By MuruguBalamurugan

Mars dasa By MuruguBalamurugan

Planet & Dasa palan By Murugu Balamurugan

Dasa bhukthi palan 2 By MuruguBalamurugan

Dasa bhukthi palan 2 By MuruguBalamurugan

Chandra Dasa By MuruguBalamurugan

Suriya Dasa By Murugubalamurugan

planet & Dasa 2 Murugubalamurugan

Saturday, April 12, 2014

12 பாவமும் நோய்களும்

ராகு கேது பெயா்ச்சி பலன்கள்

தற்பொது விற்பனையில்

நக்கீரன் வெளியீடு



12 பாவமும் நோய்களும்

நம்முடைய உடல் உறுப்புகளில் எல்லாமே  இன்றியமையாததுதான். எதாவது ஒன்றில் குறையிருந்தாலும் ஊனம், ஊனம்தான். கையில்லாதவரை பார்த்தால் ஐயோ அவருக்கு கையில்லையே என்கிறோம். கண்ணில்லாத வரைப் பார்த்தால் இரகப்படுகிறோம். மேலுறுப்புகளின் பாதிப்புகள்  கண்ணுக்குத் தெரியும் என்பதால் நம்முடைய இரக்கம் அதிகமாகி அவருக்கு உதவி செய்கிறோம்.

ஆனால் கண்ணுக்குத் தெரியாத உடலுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால்  நமக்குத் தெரிவது ல்லை. இருதயம், நுரையீரல், கிட்னி போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ கோடி பேர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உடலுறுப்புப் பாதிப்புகளை ஜோதிட ரீதியாக பார்க்க முடியும்.  ராசி மண்டலத்தை 12 பாவங்களாக பிரித்துள்ளார்கள். 12 பாவங்களையும் உடலுறுப்புகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கின்ற போழுது,

ஜென்ம லக்னத்தை கொண்டு   தலை,
இரண்டாம் வீட்டைக் கொண்டு   வலது கண்
3ம் வீட்டைக் கொண்டு கழுத்து,   வலது காது,
4ம் வீட்டைக் கொண்டு          இதயம், நுரையீரல், மார்பு.
5ம் வீட்டைக் கொண்டு மேல் வயிறு, மனம்,
6ம் வீட்டைக்கொண்டு கீழ் வயிறு,
7ம் வீட்டைக் கொண்டு இடுப்பு, பின்புறம்,விந்து,
8ம் வீட்டைக் கொண்டு           அந்தரங்க உறுப்புகள், சிறுநீரகம்,
9ம் வீட்டைக் கொண்டு           தொடை,
10ம் வீட்டைக் கொண்டு          முழங்கால்,
11ம் வீட்டைக் கொண்டு          கால், இடதுகாது,
12ம் வீட்டைக் கொண்டு          பாதம், இடது கண் 
போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


உடலின் வாசல்கள்

ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன் & இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன் & இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001