Sunday, December 23, 2012

New Year Predictions 2013 _ துலா ராசி


2013 ஆண்டு பலன்கள் துலா ராசி




வாக்கு சாதுர்யமும் நேர்மையுடன் வாழும் சுபாவமும் கொண்ட துலா ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜென்மராசி யி லேயே சனியும் ராகுவும் சஞ்சரிப்பதும் 7ல் கேதுவும் 8ல் குருவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவி யிடையேயும் ஒற்றுமைக் குறைவு வரும். 28-05-2013 முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். புத்திரபாக்கியமும் அமையும். அசையும் அசையா சொத்துக்களாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கம். ஆண்டின் தொடக்கத்தில் சில சோதனைகளை சந்தித்தாலும் பிற்பாதியில் உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்திலும் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரு ம்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டபடியேதானிருக்கும். சோம்பல்தனம் கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மற்றும் தாய் தந்தையாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. 

குடும்பம் பொருளாதாரநிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். என்றாலும் ஜூன் மாதம் முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களும் தடை விலகி நடைபெறும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிரு க்கும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதால் குடும்ப ஒற்றுமை குறை யாது.

 கொடுக்கல் வாங்கல்

மே மாதம்வரை குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவிஷயங்களில் மிகவும் கவனமுடன் செய ல்படுவது நல்லது. ஜூன் மாதம் முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு கொடுக்கல் வாங்கலிலும் மேன்மையும் லாபமும் உண்டாகும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய லாபமும் வாய்ப்பும் கிடைக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்ப தால் பிறர் விஷயங்களை தலையீடு செய்வதை தவிர்த்து அனைவரையும் அனுசரித்து செல்லது மூலம் லாபத்தை பெறமுடியும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு களும் ஊதிய உயர்வுகளும் முற்பாதியில் கிடைக்காவிட்டாலும் ஜூன் மாதத்திற்கு மேல் நல்லதொரு கௌரவமான நிலையினைப் பெறு வீர்கள். சில நேரங்களில் சிலர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்று தலைகுனியக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப் பதால் அலைச்சல்கள் குறையும்.

 அரசியல்வாதிகளுக்கு

மக்களின் செல்வாக்கினைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு உண்டாக கூடிய உடல் நிலை பாதிப்புகளே உங்களை எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் தடுக்கம். ஜூன்மாதம் முதல் ஓரளவுக்கு எதிலும் திருப்தியான நிலையை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கட்சி பணிக்ளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயம் ஒரு தொடர் பணியாகும். அதற்கு தகுந்த வேலையாட்கள் கிடைக்கப் பெற்றால் மட்டும் அதை சரியாக செய்யமுடியும். உங்களுக்கு இந்த பிரச்சனைகள் அதிகரிப்பதால் குறுப்பிட்ட காலத்திற்குள் எதையும் முடிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு பயிர் விளைச்சல் சற்று பாதிப்படையும்.

 பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் நிம்மதியான உணவு உட்கொள்ளமுடியாத சூழ் நிலை உறக்கமின்மை போன்றவை உண்டாகும். ஜூன் மாதம் முதல் நிலமைபடிப்படியாக சரியாகும். சுபகா ரியங்களும் கைகூடும்.

படிப்பு

மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உருவாகக்கூடிய காலம் என்றாலும். முயற்சி செய்த வால் முடியாதது ஒன்றுமில்லை. ஜென்மராசிக்கு 4,5க்கு அதிபதி சனி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் கண்டிப்பாக கெடுக்கமாட்டார். உடன் பழகும் நண்ப ர்களிடம் மிகவும் கவனமுடன் பழகுவது நல்லது. தேவையற்ற நட்புகள் உங்கள் பாதையை மாற்றி விடும்.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் மாதம் முதல்; ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

பிறரை எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத்தோற்றம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஜென்மசனி நடை பெறுகிறது. இதனால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும். முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி யிருக்கும். கொடுக்கல் வாங்கல் கவனம் தேவை. சனிபகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21-01-2013 காலை 10.16 மணி முதல் 
23-01-2013 இரவு 9.56 மணிவரை

பெப்ரவரி

விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 4ல் சூரியனும் 8ல் குருவும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும்  என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். அசை யும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்   17-02-2013 மாலை 05.28 மணிமுதல் 
       20-02-2013 அதிகாலை 05.03 மணிவரை

மார்ச்

மெல்லிய குரல் இருந்தாலும் திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்மராசிக்க 6ல் செவ்வாயும், மாதமுற்பாதியில் சூரியனும் சஞ்சரிப்ப தால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுத லை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடாதிருப்பது நல்லது. குடும்ப த்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும், ஒற்று மை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிக ளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீன்மன சஞ்சலங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 16-03-2013 இரவு 13.34 மணி முதல் 
19-03-2013 மதியம் 12.08 மணிவரை

ஏப்ரல்

நேர்மையற்ற குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகு சஞ்சாரம் செய்தாலும் மாத முற்பகுதி வரை மட்டும் 6ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும். சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகள் சற்று விலகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக் கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் பணிபுரிய முடியும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 13-04-2013 காலை 07.40 மணி முதல் 
15-04.2013 இரவு 08.13 மணிவரை

மே

முன்கோபமும் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற லட்சியமும் கொண்ட உங்களுக்கு 7ம் வீட்டில் குருவும் சூரியன் செவ்வாய் கேதுவும், 8ம் வீட்டில் குருவும் சஞ்சாரம் செய்வதால் நெரு ங்கியவர்களிடையே தேவையற்ற கருத்துவேறுபாடு ஏற்படும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டா கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளை ப+ர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-05-2013 மதியம் 02.57 மணிமுதல் 
13-05-2013 அதிகாலை 02.19 மணிவரை

ஜூன்

வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக ;கொள்ள கூடிய மனப்பக்குவமும் கொண்ட உங்க ளுக்கு சூரியன் செவ்வாய் 8ல் சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சரிப்பதால் பணவர வுகளிலிருந்து நெருக்கடிகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்தவ செலவுகளும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக கைகூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகளும் விலகும். பொருளாதார உயர்வினால் கடன்களும் குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். முருகப்பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 06-06-2013 இரவு 10.22 மணி முதல் 
09-06-2013 காலை 09.36 மணிவரை

ஜூலை
எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் உங்களுக்கு 9ல் சூரியன் செவ்வாய் குரு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பா ர்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளுவும் குறை யும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். கடன்கள் தீரும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 04-07-2013 அதிகாலை 05.51 மணி முதல் 06-07-2013 மாலை 05.02 மணி வரை 
31-07-2013 காலை 01.22 மணி முதல்
02-08-2013 இரவு 12.21 மணிவரை.

ஆகஸ்ட்

எப்பொழுதும் சந்தோஷமாகவே வாழ விரும்பும் உங்களுக்கு 9ல் குரு செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சரிப்பது உத்தியோக ரீதியாக உயர்வு களை உண்டாக்கும் அமைப்பாகும். சிலருக்கு எதிர்பா ர்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப த்தோடு சேருவீர்கள். பொருளாதார உயர்வுகளால் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். துர்க்கை யை வழிபடவும்.
சந்திராஷ்டமம 27-08-2013 இரவு 08.46 மணி முதல் 
30-08-2013 காலை 07.33 மணிவரை

செப்டம்பர்

தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் சனிராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் 9ல் குருவும் 10ல் செவ்வாயும், 11ல் சூரியனும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்ப தால் எதிலும் திறம்படசெயல்பட்டு வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோக த்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும் ஆஞ்சநேயரை வழிபடவும். 
சந்திராஷ்டமம் 24-09-2013 அதிகாலை 04.01 மணி முதல் 
26-09-2013 மதியம் 02.41 மணிவரை

அக்டோபர்

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு 9ல் குருவும் 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 12ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். பணவர வுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தே வைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொன் பொருள் சேரும் சிவபெருமா னை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம 21-10-2013 காலை 11.21 மணி மதல் 
23-10-2013 இரவு 09.48 மணிவரை

நவம்பர்

எதிலும் சரியாக முடிவெடுக்கம் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும் 11ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல முன்னே ற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மை ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பலபெரிய மனிதர்களால் அணுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். சிவனை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 17-11-2013 மாலை 06.45 மணி முதல்
20-11-2013 காலை 05.03 மணிவரை

டிசம்பர்

நீதி தவறுபவர்களை கண்டால் கோபம் கொள்ளும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 12ல் செவ்வாயும் 2ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாககூடிய பாதிப்பு களால் மனநிம்மதி குறைவதோடு குடும்பத்திலும் கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். பேச்சிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சிவன் முருகன் போன்ற தெய்வங்களை வழிபடவும்.

சந்திராஷ்டமம 15-12-2013 அதிகாலை 02.21 மணிமுதல் 
17-12-2013 மதியம் 12.23 மணிவரை

சித்திரை 3.4ம் பாதங்கள்

மனம் திறந்து வெளிப்படையாக பேசக்கூடிய சித்திரை அன்பர்களே! உங்கள் ஜென்மராசியிலேயே சனிராகு சஞ்சரிப்பதும் ஆண்டின் முற்பாதிவரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சாதக மற்ற அமைப்பு என்பதால் இந்த ஆண்டின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடி யாது. ஜூன் மாதம் முதல் குரு 9ல் சஞ்சரிக்க விருப்ப தால் எதையும் சமாளித்து ஏறு நடைபோடுவீர்கள் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும்.

சுவாதி

எடுக்கம் காரியம் யாவற்றிலும் வெற்றி பெறக்கூடிய சுவாதி அன்பர்களே ஆண்டின் தொடக்கமானது ஏற்றஇறக்கமான பலன்களையும் குடும்பத்தில் நிம்மதி குறைவையும், பொருளாதார நெருக்கடிகளையும் உண்டாக்கும் என்றாலும் ஜூன் மாதம் முதல் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திரபாக்கியமும் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

விசாகம் 1.2.3ம் பாதங்கள்

பொது வாழ்வில் அதிக அக்கறை கொண்ட விசாக நேயர்களே! ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். ஜூன் மாதம் முதல் குரு 9ல் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கடன்களும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 4.5.6.7.8 கல் - வைரம்
நிறம் - வெள்ள பச்சை திசை - தென் கிழக்கு  
கிழமை - வெள்ளி புதன்   தெய்வம் - லசஷ்மி

பரிகாரம்

ஜென்ம ராசியிலியே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. ஜென்ம ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்வது துர்க்கைவழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம். 28-05-2013 வரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


No comments: