Tuesday, December 25, 2012

NEW YEAR RASI PALANGAL_2013-விருச்சிக ராசி



2013 ஆண்டு பலன்கள விருச்சிக ராசி

             வாழ்க்கையில் எவ்வளவு இடையூறுகளை சந்தித் தாலும் மனம் தளராது முன்னேறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ஜென்மராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உற்றார் உறவின ர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனி விரயச் சனி நடைபெறுவதாலும் வரும் 28-05-2013 முதல் குருபகவான் அஷ்டமன ஸ்தானமான 8ல் வீட்டில் சஞ்சாரம் செய்யவி ருப்பதாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்ப டுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்ற இறக்க மான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிhபாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ள வர்களாலும் மருத்தவ செலவுகள் ஏற்படும். முடிந்தவரை உணவு விஷய ங்களில் கவன முடனிருப்பதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

இந்த ஆண்டு மே மாதம்வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாகவே இரு க்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கூட கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதாலும் குரு ஜூன் முதல் 8ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து செல்வதும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது.

கொடுக்கல் வாங்கல்

குருபகவான் மே மாதம்வரை சம சப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலும் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஜூன் முதல் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தா திருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

ஆண்டின் முற்பாதியில் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதால் உடனிரு ப்பவர்களை அணிசரித்து செல்வது பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பயண ங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் தொடக்கத்தில் பல ஊதிய உயர்வுகளும், கௌரவமான பதவிகளும் கிடைக்க ப்பெற்றாலும், ஏழரை சனியில் விரய சனி நடை பெறுவதால் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிங்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பா ராத இடமாற்றங்களால் குடும்பத்தோடு பிரியநேரிடும்.

 அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் கௌரவமான நிலையிருக்கம். மக்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். பெயர், புகழும் உயரும் சமுதாயத்தில் சிறப்பான உயர்வு களும் உண்டாகும். ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் தேவை யற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும். எடுக்கும். முயற்சிகள் அணைத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி வரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல்கள் சுமாரக இருக்கும். எதிர்பார்க்கும் விலை கிடைத்தாலும் அதுபட்ட பாட்டி ற்கானப் பலனாக இருக்காது. கால் நடைகளால் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். காய் கனி, பூ போன்றவற்றாலும் லாபங்களைப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாம தப்படும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலமாகும். ஆண்டின் தொடக்கத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர பாக்கியம் அமையும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கம். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

படிப்பு

கல்வியில் சுமாரான நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி உங்க ளுக்கே பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மேலும் உற்சாகத்தை ஏற்படுவதாக இருக்கம். ஏழரை சனி நடைபெறுவதால் உடன்பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது நிதானம் தேவை.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண் டின் முற்பாதியில் அணுகூலங்களை பெற  முடியும்.

ஜனவரி

நசைச்சுவையுணர்வு அதிகம் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதபிற்பகுதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமை ப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி யினைப் பெற்றுவிடுவீர்கள் பணவரவுகள் தேவை க்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்ப தால் கவனம் தேவை தட்சிணாமூர்த்தியை வழி படுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23-01-2013 இரவு 09-56 மணி முதல் 
     26-01-2013 காலை 09-12 மணிவரை

பெப்ரவரி

மிகுந்த திறமைசாலியாக விளங்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியனும் 7ல் குருபகவானும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய ங்களும் நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சியும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலும் திருப்திகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வுகளும் உடனிருப்பவர்களால் நற்பலனும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 20-02-2013 அதிகாலை 05.03 மணிமுதல்       22-02-2013 மாலை 04.25 மணிவரை

மார்ச்

பேச்சாற்றலால் மற்றவரை வசமாக்கி கொள்ளும் உங்களுக்கு 4ல் சூரியனும் 5ல் செவ்வா யும் சஞ்சரிப்பது அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்களை ஏற்படுத்தும் என்றாலும், 6ல் கேதுவும் 7ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறு வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் நற்பலன் ஏற்படும். தேவையற்ற பயண ங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 19-03-2013 மதியம் 12.08 மணி முதல் 
        21-03-2013 இரவு 11.31 மணிவரை

ஏப்ரல்

  முன்கோபமும், முரட்டுசுபாவமும் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 7ல் குரு சஞ்சரிப்பதும், மாதபிற்பகுதியில் செவ்வாய் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபீட்சமான நிலை யிருக்கம். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபாம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்ற வர்களுக்கு உதவிசெய்யக்கூடிய சந்தர்ப்பமும் அமையும். தெய்வ காரியங்களுக்காக பயண ங்களை மேற்கொள்வீர்கள். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம 15-04-2013 இரவு 08.13 மணி மதல் 
18-04-2013 காலை 06.41 மணிவரை

மே

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற கொள்கையுள்ள  உங்களுக்கு ஜென்மராசிக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சரிப்பதால் விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்க ளுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு தீர்வுக்கு வரும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வர ன்கள் தேடிவரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். கடன்க ளும் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் பெருகும். துர்க்கை அம்னை வழிபடவும்.
சந்திராஷ்டமம 13-05-2013 அதிகாலை 02.19 மணி முதல் 
15-05-2013 மதியம் 01.50 மணிவரை

ஜூன்

ஏற்கும் செயலை திறமையுடன் செய்து முடிக்கும் உங்களுக்கு 7ம் வீட்டில் சூரியன் செவ்வாயும் 8ல் குருவும் 12ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிக ளில் இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். எதிர்பார்க்கும் உதவிக ளும் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம 09-06-2013 காலை 09.36 மணி முதல் 
11-06-2013 இரவு 09.17 மணிவரை

ஜூலை

நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கம் உங்களுக்கு ஜென்மராசிக்கு 8ல் சூரியன் செவ்வாய் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். சுபகா ரியங்களும் தடைபடும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்தில் உள்ளவ ர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம 06-07-2013 மாலை 05.02 மணி முதல் 
09-07-2013 காலை 04.46 மணிவரை

ஆகஸ்ட்

சமுதாய பற்றும் சமூகப் பணிகளில் ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் செவ்வாய் குரு சஞ்சரித்தாலும் மாத பிற்பகுதியில் சூரியன் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்ற பலன் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிடை க்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தாகளுக்கு பணியில் நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-08-2013 இரவு 12.21 மணி முதல் 
05-08-2013 மதியம் 12.03 மணிவரை 
30-08-2013 காலை 07.33 மணி முதல் 
01-09-2013 மாலை 07.16 மணிவரை

செப்டம்பர்

துப்பறியும் வேலைகளை சிறப்பாக செய்யும் உங்களுக்கு 6ல் கேதுவும் 9ல் செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்று மை சிறப்பாக அமையும். திருமண சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம். 
சந்திராஷ்டமம் 26-09-2013 மதியம் 02.41 மணிமுதல் 
29-09-2013 அதிகாலை 02.21 மணிவரை

அக்டோபர்

இரக்க சுபாவமும், தயாளகுணமும் கொண்ட உங்களுக்கு 6ல் கேதுவும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கம் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கம். குடும்ப த்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பொருள் இழப்பும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை உண்டா க்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் சிறுசிறு லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம 23-10-2013 இரவு 09.48 மணி முதல் 
26-10-2013 காலை 09.27 மணிவரை

நவம்பர்

மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் குருவும் 12ல் சூரியன் சனி, ராகுவும் சஞ்சரித்தாலும் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், பணவரவுகள் தேவைக்கே ற்றபடியிருக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற் கொள்ளும் புதியமுயற்சிகளில் அனுகூலம் உண்டா கும். அரசு வழியிலும் ஆதரவுகிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கம். வேளைபளுவும் குறையும். சிவபெரு மானை வழிபடவும்.
சந்திராஷ்டமம 20-11-2013 காலை 05.03 மணி முதல் 
22-11-2013 மாலை 04.42 மணிவரை.

டிசம்பர்

அனைவரிடமும் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் ச+ரியன் சஞ்சரித்தாலும் 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும், லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும் திருமண சுபகாரி யங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலத்தைப் பெறமுடியும். சனிக்குரிய பரிகார ங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 17-12-2013 மதியம் 12.23 மணி முதல் 
19-12-2013 இரவு 11.56 மணிவரை

விசாகம் 4ம் பாதம்

அமைதியான முகமும், வசீகரமான தோற்றமும் கொண்ட விசாக அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் நடந்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தா லும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடாதிருப்பது நல்லது.

அனுஷம்

நடைமுறைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழக்கூடிய அனுஷ அன்பர்களே ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் திருப்திகரமான நிலையே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் கனவமுடன் செயல்பட்டால் அனுகூல த்தைப் பெறமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதாலும் ஜூன் முதல் குரு 8ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். வீண் விரயங்க ளும் உண்டாகும்.

கேட்டை

மிகவும் தைரியசாலியாகவும், கர்வம் மிக்கவராகவும் விளங்கும் கேட்டை அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் நன்மை தீமை கலந்தப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் சிறப்பான நிலையிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகி நெருக்கடிகளை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் தொடக்கத்தில் சரளமான நிலையி ருந்தாலும் பின்பு நம்பியவர்களே துரோகம் செய்வா ர்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளை சுமக்க வேண்டிய காலம் என்பதால் நிதானம் தேவை
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11 கல் - பவளம்
நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள் திசை - தெற்கு
கிழமை - செவ்வாய், வியாழன் தெய்வம் - முருகன்  

பரிகாரம்

ஏழரை சனியில் விரயசனி நடை பெறுவதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். வரும் 28-05-2013 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மாறுதலாகவிருப்பதால் வியாழக்கிழ மை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபடவும். உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.










No comments: