Tuesday, December 25, 2012

NEW YEAR RASI PALANGAL-10



2013 ஆண்டு பலன்கள், தனுசு ராசி


                           மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி பழகும் தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டில் உங்கள் ஜென்ம ராசிக்கு லாபஸ்தனமான 11ல் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். தொழில் வியாபார ரீதியாக நல்ல பல முன்னேற்றங்களை பெறமுடியும். புதிய முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறுசிறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும் வரும் 28-05-2013 முதல் குருபகவான் 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் தாராள தனவரவுகளும் உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை ஒரு தீர்வுக்கு வரும்.

தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கம். இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகளும் குறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செய்பட கூடிய ஆற்றலை கொடுக்கும். வாழ்வில் எல்லாசுகங்களையும் தடையின்றி பெறமுடியும் மனைவி பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொடுக்கம். திருமண வயதை அடைந்த வர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் சுப காரியங்கள் கைகூடுவதுடன் சிலருக்கு புத்திர பாக்கியயோகமும் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பகைமை பாராட்டிய உறவினர்களும் நட்புக்கரம் கூட்டுவார்கள் கடன்கள்யாவும் படிப்படியாக குறையும்.

 கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையே இருக்கம். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும் கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அசையும் அசையா சொத்து வகையிலிருந்த பிரச்சனைகளும், வம்பு வழக்குகளும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகவே இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்து குவியும். கூட்டாளிகளும்ஈ தொழிலாளர்களும் மாறிமாறி ஒத்துழைப்பை கொடுப்பார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய நிறுவனங்களையும் நிறுவமுடியும். அரசு வழியிலும் அனுகூலங்களை தேடிவரும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

இதுவரை தடைபட்டுவந்த எல்லா காரிய ங்களும் சிறப்பாக நிறைவேறும். ஊதிய உயர்வு களும், பதவி உயர்வும் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். இதுவரை பகைமை பாராட்டியவர்கள் இப்போது உங்களுக்கு பணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்களின் புகழும் கௌரமும் உயரக்கூடிய காலமாகும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும் உங்களின் வார்த்தைகள் அனைத்தையும் கட்டளை களாக நினைத்து நிறைவேற்றுவார்கள் கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொ ள்வீர்கள். கஷ்டப்படும் மக்களுக்கு ஆதர வாக இருந்து அவர்களின் துயரை துடைக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். என்றால் அது மிகையாகாது மற்றவர்களை விட உற்பத்தி உங்களுக்கே அதிகமாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்குவதற்கு அரசு வழியில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். கால் நடைகளாலும் லாபங்கள் பெருகும். கடன்கள் யாவும் நிவர்த்தியா கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நினைத் தவரையே கடைபிடிக்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணங்களை சேர்த்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும்.

படிப்பு

கல்வியில் பல சாதனைகளை  செய்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள் விளையாட்டு துறைகளிலும் வெற்றி உங்களுக்கே. பெற்றோர் ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டுதல்கள் மனநிறை வை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்புகள் மனதில் இனிய உணர்வுகளை உண்டாக்கம். சுற்று லா தலங்களுக்கும் சென்று வருவீர்கள்

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் எதிர்பா ராத வெற்றிகள் குவியும் லாபங்கள் பெருகும்.

ஜனவரி

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும ;ஆற்றல் உள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 2ல் செவ்வாயும் சஞ்சரிப்பதும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சனியும் ராகும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் உண்டா கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30-12-2013 அதிகாலை 01.49 மணிமுதல் 
01-01-2013 பகல் 10.56 மணிவரை 
26-01-2013 காலை மணிமுதல் 
28-01-2013 மாலை 06.33 மணிவரை

பெப்ரவரி

ஒழுக்கமும் நெறி தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாயும் மாதபிற்பகுதியில் சூரியனும் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானத்தில் சனிராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுடன் இருக்கம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளையும், எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பெறமுடியும். வேலைபளுவும் குறையும். விநாய கரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-02-2013 மாலை 04.25 மணிமுதல் 
25-02-2013 அதிகாலை 02.02 மணிவரை

மார்ச்

தான் விரும்பியதை அடையாமல் விடாத குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் 3ல் சஞ்சரிப்பதும், ராகு 11ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான நற்பலனை உண்டாக்கும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனு சரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும் பணியில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 21-03-2013 இரவு 11.31 மணி முதல் 
24-03-2013 காலை 09.21 மணிவரை

ஏப்ரல்

முன்கோபம் இருந்தாலும் இளகிய மனம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதுடன் குடும்பத்தேவைகளை பூர்;த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-04-2013 காலை 06.41 மணிமுதல் 
20-04-2013 மாலை 04.41 மணிவரை

மே

தனக்கு கீழ் படிந்தவர்களை சரிசமமாக நடத்தும் உங்களுக்கு 11ல் ராகுவும், மாத பிற்பகுதியில் சூரியன் மேலும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்க மானப் பலன்களை பெறுவீர்கள். எந்தவொரு காரிய த்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நினை த்ததை சாதிக்கமுடியும். பணவரவுகளில் நெருக்க டிகள் நிலவும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கமடையாது. புதிய வாய்ப்பு களும் தேடிவரும் முருகனை வழி படவும்.
சந்திராஷ்டமம் 15-05-2013 மதியம் 01.50 மணிமுதல்
18-05-2013 அதிகாலை 00.11 மணிவரை

ஜூன்

கள்ளம் கபடமற்ற அனைவரிடமும் சகஜமாக பழகும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். புத்திர வழியிலிருந்த கவலைகள் மறையும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயண ங்களையும் மேற்கொள்வீர்கள் சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம 11-06-2013 இரவு 09.17 மணிமுதல் 
14-06-2013 காலை 07.48 மணிவரை

ஜூலை

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது குடும்ப த்தில் நிம்மதி குறைவையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றாலும் உடன் குரு இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள் பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் நிறைவேறும். உத்தி யோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 09-07-2013 காலை 04.46 மணி முதல்
11-07-2013 மாலை 03.22 மணிவரை

ஆகஸ்ட்

உரத்த குரலில் கடுமையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் லாப ஸ்தானத்தில் சனிராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக மேன்மைகளை உண்டாக்கம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்ற ங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள் சொந்த பூமிமனை வாங்கும் யோகமும் அமையும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 05-08-2013 மதியம் 1203 மணி முதல் 
07-08-2013 இரவு 10.53 மணிவரை

செப்டம்பர்

தாம் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 7ல் குருவும், 9ல் சூரியபகவானும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். பொன்பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் உண்டாகும். சொந்த முயற்சியால் பலசாதனைகளை செய்வீர்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01-09-2013 மாலை 07.16 மணிமுதல் 
04-09-2013 காலை 06.16 மணிவரை 
29-09-2013 அதிகாலை 02.21 மணிமுதல் 
01-10-2013 மதியம் 01.28 மணிவரை

அக்டோபர்

தீய நெறிகளில் ஈடுபடுபவர்களை தண்டி க்கும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 10ல் சூரியனும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி கள் குறையும். புதிய கிளைகளை நிறுவும் நோக்க மும் நிறைவேறும். பொருளாதார நிலையும் உயர்வ டைவதால் சொந்த வீடு மனை வண்டி வாகன ங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுத்த கடன்க ளும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கம். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-10-2013 காலை 09.27 மணிமுதல் 
28-10-2013 இரவு 08.44 மணிவரை

நவம்பர்

முகஸ்துதிக்கு அடிபணியாமல் உயர்ந்த பண்புகளை கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 11ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நினைக்கும் காரியத்தை நிறைவேற்றமுடியும். எடுக்கம் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கம். வேலைபளுவும் குறையும். கடன்கள் யாவும் தீரும் விநாயகரை தினமும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22-11-2013 மாலை 04.42 மணி முதல் 
25-11-2013 காலை 04.03 மணிவரை

டிசம்பர்

உதாரண குணமும் தர்ம சிந்தனையும் கொண்ட உங்களுக்கு 10ல் செவ்வாயும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குரு வக்கிரகதியிலிருப்பதால் பணவரவுகளில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படவும். தொழில் வியாபாரரீதியாக முன்னேற்றங்களைப் பெற முடியும். பொன் பொருள் சேரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கம். கடன்களும் குறையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-12-2013 இரவு 11.56 மணிமுதல் 
22-12-2013 பகல் 11.26 மணிவரை

மூலம்

 உணர்ச்சிவசப்பட கூடிய குணம் கொண்ட மூல ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த ஆண்டில் எல்லாவகையிலும் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். தாராளதன உறவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலவும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை விட பன்மடங்கு லாபங்களை பெருகி மகிழ்ச்சியினை ஏற்படுத்தம். குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

பூராடம்;

எப்பொழுதும் நல்லதையே செய்யக்கூடிய பூராட அன்பர்களே! உங்களுக்கு செல்வம் செல்வாக்கு யாவும் உயரக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கம். வீடுமனை வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் யாவும் நிறை வேறும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் ப+ரிவீக சொத்து க்களால் அனுகூலமும் ஏற்படும் திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடிவரும். கொடுக்கல் வாங்கலிலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள் உத்தியோகத்திலிருப்பவா ;களுக்க ஊதிய உயர்வும் இடமாற்றமும் தடையின்றி கிடைக்கும். 

உத்திராடம் 1ம் பாதம்

மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த உத்திராட அன்பர்களே! குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கம். புதிய நவீன பொருட் சேர்க்கைகளும் அமையும். புதிய வீடுமனை வாங்கும் யோகமும், கட்டியவீட்டை புதுப்பிக்கும் வாய்ப்பு சிறப்பாக அமையும். வண்டி வாகனங்களாலும் லாபங்கள் கிட்டும் பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் யாவும் கிடைக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திரபா க்கியத்தையும் பெறகூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12   கல் - புஷ்ப ராகம் 
நிறம் - மஞ்சள், பச்சை திசை - வடகிழக்கு
கிழமை - வியாழன, திங்கள்;   தெய்வம்- தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

28-05-2013 வரை குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குருபகவானுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 5ல் கேது சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவதும் உத்தமம்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.




No comments: