Tuesday, May 8, 2012

குருபெயர்ச்சிபலன்கள் கும்ப ராசி

குருபெயர்ச்சிபலன்கள் கும்ப ராசி

அதிக கற்பனை திறனும், நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் கொண்டகும்பராசி  நேயர்களே!
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ் தானமான 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இக்காலங்களில் சுகவாழ்வு சொகுசு வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் எற்படும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையை சிலகாலம் தள்ளி வைக்கவும். வரும் 02.12.2012 முதல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 3ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டிலிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.


முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்குத்தான் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை, சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படும். சுகவாழ்வில் இடையூறுகள் உண்டாகும். மனைவிப் பிள்ளைகளாலும், தாய் தந்தையாலும் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படு வார்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அதிஷ்டங்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்து கடன்களின்றி சமாளித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்பட கூடும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தேவை யற்ற பயணங்களைத்தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் ஓரளவுக்கு நிம்மதியான நிலையி ருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெறும். ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடையும். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் வேலை பளுவை குறைக்க உதவும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சலை எதிர்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்ட செல்ல நேர்ந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பயனடை வது நல்லது. கூட்டாளிகளையும் உடன் பணிபுரியும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளை சிந்தித்து செயல்படுத்துவது தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது மிகவும் உத்தமம்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் உடன் பழகுபவர்களிடமும் கவனம் தேவை. வீண்வம்பு வழக்குகளும் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் பெயர் புகழ் உயரும் என்றாலும் பணவரவுகளில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களாலும் அலைச் சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தோடு சேர்ந்திருக்க முடியாதநிலை, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் மகசூல் கிடைத்தாலும் அதற்காக அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். லாபமும் சுமாராகவே இருக்கும். காய்கனி பூ வகைகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். பூமி மனை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. 

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் உடல் நிலையானது மந்தமாகவே இருக்கும். மருத்துவ செலவுகளும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு கள் தோன்றினாலும் ஒற்றுமை குiறாயது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர் களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித் தால் அவர்கள் கூலம் சற்று ஆதாயப் பலன் களை பெறமுடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

கல்வியில் மந்தநிலை ஞாபகமறதி போன்ற ஏற்படுவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களும் குறையும். உடல்நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களால் வீண் பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் முதலீடுகளில் கவனம் தேவை.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். பணவரவுகள் சுமாராக இருக்கக்கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளை குறைக்கவும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொண்டாலும் அதிலும் தாமதநிலையே ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை பயணங் களை தவிர்த்துவிடவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டியி ருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இக்காலங்களில் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சுகஸ்தானமான 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்க ளிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெறுவீர்கள். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை தரும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக் கடிகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதும், ஆடம்பர செலவுகளை குறைப்பதும் மிகவும் நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் விரும்பிய  இடமாற்றங்களும், பதவி உயர்வுக ளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளையும் தாண்டி லாபத்தைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்ப தால் அலைச்சல்களை குறைக்கலாம். சேமிக்க முடியாது என்றாலும் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அவ்வளவு அனுகூலப் பலனை எதிர்பார்க்க முடியாது. எடுக்கும் முயற்சிகளில் அரும்பாடுபட்டே முன்னேற முடியும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்கள் வரன்களுக் காக காத்திருக்க வேண்டிய காலமாகும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு முன்னேற்றங்களை உண்டாக்கும். பண விவகாரங்களில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதோ, வாக்குறுதி கொடுப்பதோ கூடாது. கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சகஸ்தானமான 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்க ளில் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். பிறரை நம்பி கடன்கொடுத்தாலும் கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்றாகி விடும். உற்றார் உறவினர்களை சற்று அனு சரித்து செல்வது நல்லது. கல்வியில் மாணவ மாணவியருக்கு மந்தநிலை ஏற்படும். தேவையற்ற நட்புகள் உண்டாவதை தவிர்க்க வும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் எதிர்பாராத இடமாற் றங்களால் அலைச்சல் உண்டாகும். புதிய இடம், புதியாத பாஷை என பல வகையிலும் தொல்லைகள் ஏற்படுவதால் நிம்மதி குறையும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் தடைகளும் தாமதங் களும் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு சாதகப் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய மறைமுக போட்டிகள் நிலவுவதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். அரசியல் வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அவிட்டம்

சிறந்த உழைப்பாற்றல் கொண்ட அவிட்ட நட்சத்திர நேயர்களே! இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குருபகவான் சக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை. என்பதால் பண விஷயங்களில் கவன முடனிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

சதயம்

கிண்டலும் கேலியும் உடன் பிறந்தவைகளாக விளங்கும் சதய நட்சத்திர நேயர்களே குரு பகவான் சகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுகவாழ்வு பாதிப்படையும். எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தினையே பெறமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலும் குறையும்.

பூரட்டாதி 1,2,3

பரந்த மனப்பான்மைக் கொண்ட பூரட்டாதி நட்சத்திர நேயர்களே குரு பகவான் சகஸ ;தானான 4ல் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உற்றார் உறவி னர்களை சற்று அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலனை பெறமுடியும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 8,17,25  கிழமை:சனி
நிறம்:கருப்பு  கல்:நீலம்
திசை:மேற்கு  தெய்வம்:ஐயப்பன்
     
பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் சகஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழகிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெற்தீப மேற்றி வழிபடுவது, ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

No comments: