Sunday, May 6, 2012

குரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி

எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல் பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே!


ஆண்டு கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்திலுள்ள வர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். 5ல் சனியும் சாதகமின்றி சஞ்சரிப்ப தால் வீண் அலைச்சல்  டென்ஷன் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் சுமாரான நிலையே இருக்கும். குருபார்வை 4,6,8ம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சேமிப்புகள் குறையும்.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். தூக்கத்தில் கனவுத் தொல் லைகள் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவற்றாலும் உடல் சோர்வடை யும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். சகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும்.

குடும்பம் பொருளாதாரம்

தனக்காரகன் குருபகவான் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சாரம்
செய்ய வுள்ளதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர் களால் மருத்துவ செலவுகள், சுபகாரியங்களில் தடைகள் போன்றவை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படுவது மட்டு மின்றி சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். பூமிமனை போன்றவற்றாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் சற்று சாமதமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற் றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரி டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற பணி கிடைக்க தாமதமாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் எதிர்பாராத விரயங்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுகொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகளும் சற்று தாமதப்படும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் செலவை ஏற்படுத்தும்.

கமிஷன், ஏஜென்ஸி

குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளலிருப்போர்களுக்கு லாபம் குறையும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியா மல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இதனால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள் எதிலும் சற்று கவனமுடனிருப்பது நல்லது. 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க நிறைய சிரமங்களை அடைய நேரிடும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறா மல் காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை மந்தமடையும். மறைமுக வருவாயும் குறையும்.

விவசாயிகளுக்கு

விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய முடியாமல் விளைபொருட்கள் தேக்கமடையும். வாய்க்கால் வரம்புப் பிரச்சனைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதங்களும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு

பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரியங்க ளுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படுவதால் வீண் செலவுகளும் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் சில மனகவலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கி யத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

படிப்பு

கல்வியில் அதிக முயற்சி எடுத்துப் படித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் படிப்பில் கவனம் தேவை. விளை யாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். அரசுவழி உதவிகள் தாமதப்படும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி ரேஸ் போன்றவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் இவற்றில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. 

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான குரு 12ல் மறைந்து கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் பணவரவு களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். 4ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதி யிலிருப்பதும் 6ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் எதிர் பாராத வீண் செலவுகள், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பதை வைத்து சிறப்புடன் தொழில் செய்வதே நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களி;ல் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவியி டையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். 6ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும் என்றாலும் பணவிஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்தநிலையை சந்தித்தாலும் பொருட் தேக்கமின்றி சமாளிக்க முடியும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டு டன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்க ளைப் பெறமுடியும். சிறிது கடன்களும் உண்டாகும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் கடந்த காலப் பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடு வீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் இக்காலத் தில் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிக ளும் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தி லிருந்த முடக்க நிலை விலகி லாபங்கள் பெரு கும். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரகமாற்றத்தால் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் மேன்மைகளை ஏற்படுத்தும் தெய்வ தரிசனங் களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். 

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களை தான் பெற முடியும். பண வரவுகளும் சுமாராக தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங் கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். புத்திர வழி யில் மனக்கவலைகளும் உண்டாகும். கொடுக ;கல் வாங்கலில் வீண் விரோதங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளால் சில நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும் உத்தியோகஸ்தர்கள் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பதும், தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு நற்பலனைப் பெற முடியும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் இக்காலத்திலும் எதிலும் சிந்;தித்து செயல்படுவதே நல்லது. பணவிஷயங் களில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சில ஊடல்களும், கூடல்களும் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நன்மை யளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே கிட்டும். கூட்டாளிகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தி யோர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வேலைபளு கூடும்.

மிருகசீரிஷம் 3,4 பாதங்கள்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றிபெற கூடிய மிருகசீரிஷ நட்சத்திர நேயர்களே இந்த குருபெயர்ச்சியால் குரு விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். முடிந்தவரை வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாம லிருப்பதும் வீண் விரயங்களை தவிர்க்க உதவும். பணியிலிருப்பவர்களுக்கு வேலை பளு கூடும்.

திருவாதிரை

எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னு டைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்துள்ள நேயர்களே! குரு 12ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதா லும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோ கத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற் றங்கள் ஏற்பட்டு வீண் அலைச்சல்களும் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. 

புனர்பூசம் 1,2,3 பாதங்கள்

நல்ல அறிவாற்றலும் எதிலும் சிந்தித்து செயல் படகூடிய திறனும் கொண்ட புனர்பூச நட்சத்திர நேயர்களே குரு 12ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் தட்டுப்பாடுகள் நிலவும். என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நன்மை தரும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

கிழமை:புதன்  நிறம்:பச்சை
திசை:வடக்கு  கல்:மரகதம்
தெய்வம்:விஷ்ணு

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சனியும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வதும் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.

No comments: