Tuesday, May 8, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி


குரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி

நல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும் கொண்ட மகர ராசி நேயர்களே!
வரும் 17.05.2012 முதல் பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் பஞ்சமஸ்தான மான 5ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சனி 10ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்க ளுக்கு பதவி உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உதிய உயர்வுகள் கிட்டும் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.



முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி பிள்ளை களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். நெருங்கிய வர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியை உண்டாக் கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறையும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இது நாள்வரை தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களும் தடைவிலகி கைகூடும். கணவன் மனைவியி டையே ஒற்றுமை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், பொன் பொருள் சேர்க்கை போன்ற யாவும் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறைந்துவிடும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிக்க முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று வேலை பளு கூடும் காலமிது என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திறமை களை என்னதான் வெளிப்படுத்தினாலும் மேலதிகாரிகளிடம் நற்பெயரை எடுக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசியதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

தொழில் வியாபாரிகளுக்கு

சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரி டும் என்றாலும் எதையும் எதிர்நீச்சல் போட்டாவது சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டாலும் சுமாரான லாபமே கிட்டும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற வற்றிலும் சரளமான நிலையிலிருப்பதால் கொடுத்த கடன்களையும் திரும்பப் பெறமுடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தால் எதிர்பார்க்கும் பதவி உயர்வு களில் தாமத நிலை ஏற்படும். உடனிருப் பவர்களாலும் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதுடன் வீண் விரயமும் ஏற்படும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தினை பெறமுடியாது. புமுபூச்சிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். நீர்வரத்து சமயத்திற்கு கிடைக்கப் பெறாமல் பயிர்கள் நாசமடையும். கால்நடைக ளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றாலும் லாபம் கி;;ட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பணவரவுகளும் திருப்திகரமாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்க ளின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.

படிப்பு

கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல ஞாபக சக்தி திறனும் உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புக ளாலும் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எதிர்பாராத திடீர் தனவரவை பெறமுடியும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் யாவும் தடை விலகி கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத் துக்களிலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமாக இருப்பதால் கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை  ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அனுகூலம் கிட்டும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் ஏற்றமிகு பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் திருமண சுபகாரியங் கள் தடபுடலாக நிறைவேறும். பணவரவுகளுக் கும் பஞ்சம் இல்லாமலிருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் யாவும் சேரும். புதிய நவீன கருவிகள் வாங்ககூடிய வாய்ப்பும் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தி யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகளுக்கு தடையிருக் காது. தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிக ளில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரம மாற்றத்தால் கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் சற்று அலைச்சல்களும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது கடன்களை ஏற்படுவதை தவிர்க்க உதவும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் உத்தமம்.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் இதுவரை இருந்த பிரச்சனைகள் யாவும் விலகி குடும்பத்தில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தெய்வ காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலனை அடைவீர்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரமும் போட்டிகளின்றி நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் எதையும், சமாளிக்கக்கூடிய பலமும் வலிமையும் கூடும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. சேமிக்க முடியும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் நினைத்ததை நினைத்தப்படி நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் பொருளாதார நிலையானது மேன்மையடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்க ளாலும் லாபம் அமையும். கொடுத்த வாக்குறுதிக ளையும் காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்க ளின் ஆதரவும் மகிழ்ச்சியை உண்டாக்கும். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலநேரங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியா பாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்

எப்பொழுதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை மகிழச் செய்யும் உத்திராட நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங் களில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தடைப்பட்டு நின்ற திருமண சுபகாரிய முயற்சி களும் தடைவிலகி கைகூடும். எடுக்கும் முயற்சி கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை.

திருவோணம்

கடவுள் பக்தியும், ஆத்ம பலமும் அதிகம் கொண்ட திருவோண நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளநிலையில் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி யாகும். தொழில் வியாபாரமும் சிறப்பான நிலையிலே நடைபெறும். போட்டிகளையும் சமாளித்து விடமுடியும். சேமிப்பு பெருகும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

மற்றவர்களுக்காக உழைப்பதில் சளிப்பில்லாத அவிட்ட நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் அசையும் அசையா சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். உத்தியோகத்தி லிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பொன்பொருள் சேரும். குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 8,16,26  கிழமை:சனி
நிறம்:கருநீலம்  கல்:நீலக்கல்
திசை:மேற்கு  தெய்வம்:ஐயப்பன்
     
பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரித்தாலும் சனி 10ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. 02.12.2012 முதல் ராகுகேதுவும் 4,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் துர்க்கைவழிபாடு விநாயகர் வழிபாடு செய்யவும்.

No comments: