Monday, May 7, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி

நயமாக பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் துலா ராசி நேயர்களே!


வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் ஜென்மராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி உங்களுக்கு ஏழரை சனி தொடருவரும் சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் மேலும் நெருக்கடி களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்திலுள் ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு உண்டாக கூடிய போட்டிகளால் லாபம் குறையும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் போகும். உத்தியோகஸ் தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதோடு பணியாளர்களும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகும். கடன்களும் உண்டாகும்.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றால் அன்றாட பணிகளில் சுறுசுறுப் புடன் ஈடுபட முடியாத நிலை உண்டாகும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். நல்லதே செய்தாலும் அவற்றால் மனசஞ் சலங்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

உங்களுக்கு ஏழரை சனி தொடருவதாலும், குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் நிம்மதி குறையும், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு களும் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தன் பங்கிற்கு தேசையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளிலும் நெருக்க டிகள் நிலவுவதால் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படைய கூடிய சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை அனை வரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளால் நிம்மதி குறையும். எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவர்களின் வேலையாக இருக் கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தேவையற்ற வீண் பழிச் சொற்களை சுமக்க வேண்டியிருப்பதால் பணியில் நிம்மதி குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாமல் வேலைபளு கூடும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவமானப்பட நேரிடும். வரவேண்டிய வாய்ப்புகளும் போட்டி பொறாமைகளால் கை நழுவும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் வரவேண்டிய லாபங்களும் குறையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் குறையும். பணவிஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்தை கடைப் பிடித்தால் மட்டுமே பதவிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அவர்க ளின் ஆதரவை தொடர்ந்து பெற முடியும். மேடை பேச்சுகளில் வேகத்தை குறைப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். பழு பூச்சிகளின் தொல்லை மற்றும் நீர்வரத்து குறைவு போன்றவற்றால் எதிர்பார்த்த மகசூலைப் பெற முடியாது. பட்டபாட்டிற்கு பலனின்றி போகும். கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுவதால் எதிர்பாராத மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாதவிடாய் கோளாறு போன்றவற்றால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தட்டிப்போகும். புத்திரர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்புகள் குறையும்.

படிப்பு

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி போன்றவற்றை ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் தகுந்த பாடங்களைப் படிக்க முடியாமல் போகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் ஈடுபாடு காட்டினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி உங்களுக்கு ஏழரைசனியும் தொடருவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் சுபகாரியத்தடைகளும் ஏற்படும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதால் குடும்ப ஒற்றுமையும் குறையும். உற்றார் உறவினர்க ளுக்கு என்னதான் நல்லது செய்தாலும் அவர்களை திருப்தியடைய செய்ய முடியாது. உங்கள் உதவியை ஏற்றுக்கொண்டு போற்று வதற்கு பதில் தூற்றுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் லாபங்கள் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணை பெற முடியும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக் குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவினை எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதி குறையும். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை பெறுவதால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்று அலைச்சலை சந்திப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவு நல்லது.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகளி லிருந்து சற்றே விடுபடுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமானப் பலனை பெறமுடி யும். கணவன் மனைவி சற்றுவிட்டுகொடுத்து நடப்பது நல்லது. ஏழரை சனி தொடருவதும் வரும் 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரக மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் முன்கோபத்தை குறைப்பதம் நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உண்டாகும். பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாமலிருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதா லும் வீண் அலைச்சல்கள் குறையும். உத்தி யோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு குறையும். மற்றவர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய் வதைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஏழரை சனி நடைபெறுவதும் சர்பகிரகங்கள் 1,7ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. நம்பியவர்களே துரோகம் செய் வார்கள். உதவிப் பெற்றவர்களே தூற்றுவார்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கூடத் தாமதப்படும். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை  என் றாகி விடும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துகளாலும் வீண்; விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மிகவும் நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். அரசியல் வாதிகளின் பதவிகளுக்கு ஆபத்து உண்டாகும்.

சித்திரை 3,4 பாதங்கள்

சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடும் சித்திரை நட்சத்திர நேயர்களே! இந்த குருபெயர்ச்சியால் குருபகவான் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சி களில் தடைகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும். உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.

சுவாதி

நல்ல அறிவுகூர்மையும், சிறந்த திறமையும் கொண்ட சுவாதி நட்சத்திர நேயர்களே! குரு 8ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுப காரியங்க ளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கமின்றி லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமின்றி அலைச்சல்களும் அதிகரிக்கும்.

விசாசம் 1,2,3 பாதங்கள்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக அக்கறை கொண்ட விசாக நட்சத்திர நேயர்களே! குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மூலம் இக்காலங்களில் பணவரவுகள் குறையும். கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர் களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே அனுகூலம் பலனை பெறமுடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 6,17,23  கிழமை:வெள்ளி
நிறம்:வெண்மை  கல்:வைரம்
திசை:தென்கிழக்கு தெய்வம்:ஷலஷ்மி

பரிகாரம்

குருபகவான் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரம் செய்வது வியாழ கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபடுவது நல்லது. ஏழரைசனியும் தொடருவது சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

No comments: