Tuesday, May 8, 2012

குருபெயர்ச்சிபலன்கள் மீன ராசி

குருபெயர்ச்சிபலன்கள் மீன ராசி
மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் பண்பினை கொண்ட மீன ராசி நேயர்களே!
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருபெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசியாதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைதாமங்கள் உண்டாகும். அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.



முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டேயிருக் கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக் கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறை யும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடமும் மனசஞ்சலங்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துகொள்வது மிகவும் உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்தி;ப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற் களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்டாது கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி களும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. 

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் இழப்புகளை சந்திப்பீர்கள். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்று வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய காலமாகும்.செய்யாத தவறுக ளுக்காக பத்திகளால் தேவையற்ற அவப் பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். தேவை யற்ற வாக்குவாதங்களால் உடனிருப்பவர்களிடம் ஒற்றுமை குறையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தும், பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியாது. புழு பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். விளைச்சலுக்கேற்ற முழு லாபத்தை பெற முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதாரம் தடைப்படும். 

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன் மனைவியி டையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகளும் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடன் வாங்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிப்பதுடன் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.

படிப்பு

கல்வியில் மந்தமான நிலையே உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்களும் குறை யும். ஆசிரியர்களின் ஆதரவும் குறையும். விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடும்போதும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சி களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத் தில் நிம்மதி குறைவு உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங் களும் உங்களுக்கே வீண் பிரச்சனையாகி விடும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே சங்கடப்பட வேண்டிவரும். கொடுக்கல் வாங்க லிலும் வீண் விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்தி லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சேமிப்பு குறையும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி பணம் கொடுத்தால் திரும்ப பெறமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடி யாது என்பதால் பெரிய மனிதர்களின் நட்பையும் இழக்க நேரிடும். கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவை உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருப்பதால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றங்களையும் சந்திப்பார்கள். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. கடன்கள் ஏற்படும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பணவரவுகளிலிருந்த தடைகள் சற்று விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை இக்காலத்தில் மேற்கொண்டால் நற்பலனை பெறமுடியும். கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்கு அஷ் டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர் களை அனுசரித்து செல்வதும் நல்லது.  வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்கவிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும் முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் எதிலும் அதன் முழுபலனை பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்பத் தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்;ப்பதும், உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பண விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படகூடிய போட்டிக ளால் தொழில் மந்த நிலையடைந்தாலும் தேக்கமடையாது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிப்பதோடு வேலை பளுவும் கூடுவதால் உடல் சோர்வு உண்டாகும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலத்திலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் தடையும் தாமதமும் நிலவுவதால் எதிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்பு களில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய வாக்குவாதங்களால் ஒற்றுமை குறைவு ஏற்படகூடும் என்பதால் அனுசரித்து நடந்துகொள் வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர் களிடம் கவனமுடனிருப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்ப தும் நல்லது. விவசாயிகள் பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாதிருப்பதும் உத்தமம்.

பூரட்டாதி 4

ஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நட்சத்திநேயர்களே இந்த குருபெயர்ச்சி யின் மூலம் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனியும் நடைபெறுவதால் இக்காலங் களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. சேமிப்புகள் குறைவதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும்.

உத்திரட்டாதி

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெற கூடிய உத்திரட்டாதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் உத்தமம்.

ரேவதி

ஆடம்பரமாக செலவு செய்வதில் அதிக அக்கறை கொண்ட ரேவதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை உண்டாகும். வெளிவட்டார தொடர்பு களிடமும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சிலகாலம் தள்ளிவைப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 3,12,21,30 கிழமை:வியாழன்
நிறம்:மஞ்சள்  கல்:புஷ்பராகம்
திசை:வடகிழக்கு தெய்வம்:தட்சிணா
        மூர்த்தி
     
பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 3ல் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் தொடர்ந்து தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம். அஷ்டமசனி யும் நடைபெறுவதால் சனிக்கு சனிக்கிழமை தோறும் பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். 2.12.2012 முதல் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

No comments: