Monday, May 7, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி


எதிலும் தனித்து நின்று போராடி வெற்றிபெறக் கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

ஆண்டுக்கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் தொழில் வியாபார உத்தியோக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். பணவிஷயங்களில் நம்பியவர்களே  ஏமாற்றுவார்கள் என்பதால் கவனம் தேவை, என்றாலும் ஒரு ராசியில் அதிக காலம் தங்ககூடிய கிரகமான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகுபகவானும் 3ம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நிறைவெறும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபார உத்தி யோக ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் சமாளித்து லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

தேக ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மருத்துவ செலவுகளும் படிப்படியாக குறையும். மனைவி பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். உங்களுக்கு இருந்துவந்த பிரச்சனைகளும், வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வருவதால் மனநிலையும் நிம்மதியாகவும், மகிழ்ச்சிகரமாக வும் இருக்கும்.

குடும்பம் பொருளாதாரம்

பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக்கொள்வ தால் சேமிக்கவும் முடியும். உற்றார் உறவினர் களின் ஆதரவு மிக சிறப்பாக இருக்கும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் பூமிமனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

குருபகவான் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலை யால் வேலைபளு அதிகரிப்பதுடன் உயரதி காரிகளின் கெடுபிடிகளும் மன உளைச்சலை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்க தாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டணிகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் அரசுவழி உதவிகளும் சற்று தாமதமாகும். தொழிலில் ஏற்படகூடிய போட்டி களால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். குறித்த நேரத்தில் ஆடர்களை சப்ளை செய்யாததால் பெயரும் கெடக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பயணங் களை தவிர்ப்பது நல்லது. நவீன கருவிகள் பழுதடைவதால் வீண் விரயங்களும் உண்டாகும்.

கமிஷன், ஏஜென்ஸி

குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளிலிருப்பவர் களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்று குறையும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பணவிஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த கடனுதவிகளும் கிடைக்கப்பெறாமல் போகும். குறித்த நேரத்திற்கு மழை பெய்யாததால் விளைச்சலும் குறையும். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் மருத்துவ செலவினை எதிர்கொள்ள நேரிடும். வாய்க்கால் வரப்பு தகராறுகளாலும் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைதாமதங்கள் ஏற்படும் என்பதால் சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக அமைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்பானது சற்று தாமதமாகத் தான் அமையும்.

படிப்பு

கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். தேவையற்ற பொழுது போக்கு களை தவிர்ப்பதும் நண்பர்களின் சகவாசங் களைத் தவிர்ப்பதும் நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பல வெற்றிகளைப் பெறுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர் களின் ஆதரவும் கிடைக்கப்பெறும்.

ஸ்பெகுலேஷன்

குருசாதகமின்றி சஞ்சரிப்பதால் லாட்டரி ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மிகவும் உத்தமம்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளிடமும் தேவையற்ற வம்பு வழக்குகள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் புதிய வாய்ப்பு களும் கைநழுவும். குடும்பத்தின் பொருளாதார நிலையும் சுமாராகத்தானிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமானப் பலனைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியற்ற நிலையினை சந்திப்பார்கள். உயரதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகரிப்பதால் வேலை பளுவும் கூடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டு பிரிந்துசெல்ல வும் நேரிடும். சேமிப்புகளும் குறையும்

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்க சற்று தாமதமாகும். பணியிலிருப்போருக்கு வேலை பளு அதிகரிப்பதுடன் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நிதா னத்தை கையாண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனு சரித்து நடப்பதால் சாதகமான பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நன்மைதரும். தொழில் வியா பாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபங்களும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச் சல்கள் குறையும். வங்கி சேமிப்பு குறையும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் கடந்த காலத்திலிருந்த பிரச்ச னைகள் யாவும் குறையும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகளும் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலன் அமையும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணம்கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் சற்றே விலகுவதால் புதிய வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியி லிருந்த நெருக்கடிகள் குறையும். பயணங்களில் இருந்த அலைச்சல்கள் விலகி அனுகூலங்கள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் பெயர் புகழ் உயரும் காலமாக இருக்கும். 

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் மீண்டும் ரோகினி நட்சத்திரத்தில் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் மீண்டும் நீங்கள் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வதால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் சாதகமானப் பலன்களை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரள மான நிலை இருக்காது. கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் ஓரளவுக்கு செலவுகளை சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வதால் கடன் களும் குறையும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடக்கப் பழகிக் கொண்டால் எதையும் சமாளித்துவிட முடியும். வேலை பளுவும் குறையும்.

மகம்

முன்கோபம் அதிகமிருந்தாலும் இளகிய மனம் கொண்ட மகர நட்சத்திரத்தில் பிறந்த நேயர்களே! இந்த குருபெயர்ச்சியின் மூலம் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்திருள்ள வர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமையும் மிக சிறப்பாக அமையும்.

பூரம்

எப்பொழுதும் சுகமாக வாழ நினைக்கும் பூர நட்சத்திர நேயர்களே! இந்த குருமாற்றத்தால் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அடிக்கடி நெருக்கடிகள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுக ளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிவரும். வீண் பழிச்சொற்களையும் சந்திப்பீர்கள். எதிலும் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே நற் பலனை அடைய முடியும். தேவையற்ற பயணங் களை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்திரம் 1 பாதம்

எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட உத்திர நட்சத்திர நேயர்களே குரு 10ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் தொழில் வியாபாரத்தில் வீண் விரயங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத் தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டானாலும் பெரிய கெடுதியில்லை சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைக்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 1,10,19,28 கிழமை:ஞாயிறு
நிறம்:சிவப்பு  கல்:மாணிக்கம்
திசை:கிழக்கு  தெய்வம்:சிவன்

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் மஞ்சள் வஸ்திரமும், கொண்டை கடலை மாலையும் சாற்றி நெய் தீபமேற்றுவதும் உத்தமம்.

No comments: