Wednesday, May 27, 2015

ஜீன் மாத ராசிப்பலன் 2015




   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


ஜீன் மாத ராசிப்பலன்  2015

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6ல் இராகு சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் செவ்வாய் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.

பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 01.06.2015 மதியம் 01.06 மணி முதல் 03.06.2015 இரவு 07.49 மணி வரை.
28.06.2015 இரவு 09.46 மணி முதல் 01.07.2015 அதிகாலை 04.17 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாயும் 3ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்

பரிகாரம். சிவ வழிபாடு செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.06.2015 இரவு 07.49 மணி முதல் 05.06.2015 இரவு 12.18 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&ல் குரு  சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் 12ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல் படுவது நல்லது.  பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 05.06.2015 இரவு 12.18 மணி முதல் 08.06.2015 அதிகாலை 03.40 வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் ராகுவும், 11ல் செவ்வாய் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும்.

பரிகாரம். குரு ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 08.06.2015 அதிகாலை 03.40 மணி முதல் 10.06.2015 காலை 06.39 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு 10&ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஜீவன ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.06.2015 காலை 06.39 மணி முதல்12.06.2015 காலை 09.31 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 11ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் செவ்வாய் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.06.2015 காலை 09.31 மணி முதல் 14.06.2015 மதியம் 01.04 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 8&ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது  சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 14.06.2015 மதியம் 01.04 மணி முதல் 16.06.2015 மாலை 05.42  மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   சூரியன் செவ்வாய் சாதகமின்றி சஞ்சரித்தாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம்.

பரிகாரம். முருக வழிபாடு மேற்கொள்வது சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.06.2015 மாலை 05.42  மணி முதல் 18.06.2015 இரவு 12.40 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் 12ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால்  நினைத்ததை நிறைவேற்ற முடியும் உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். 

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.06.2015 இரவு 12.40 மணி முதல் 21.06.2015 காலை 10.41 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  சமசப்தம ஸ்தானமான 7&ல் குருவும் மாத பிற்பாதியில் 6ல் சூரியன் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.

பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.06.2015 காலை 10.41 மணி முதல் 23.06.2015 இரவு 11.07 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4 &ல் சூரியன் செவ்வாய், 6ல் குரு சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடைகளுக்கு பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.

பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 23.06.2015 இரவு 11.07 மணி முதல் 26.06.2015 காலை 11.41 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3&ல் சூரியன் செவ்வாய்  சஞ்சாரம் செய்வதாலும் 5ல் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.06.2015 காலை 11.41 மணி முதல்   28.06.2015 இரவு 09.46 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

04.06.2015  வைகாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி, மூல  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கடக இலக்கினம்  
தேய்பிறை.

07.06.2015  வைகாசி மாதம், 24 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, பஞ்சமி திதி, திருவோண நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கடக இலக்கினம் தேய்பிறை.

08.06.2015  வைகாசி மாதம், 25 ஆம் தேதி திங்கள்கிழமை, சஷ்டிதிதி, அவிட்ட  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் மிதுன இலக்கினம்  தேய்பிறை.

29.06.2015  ஆனி மாதம், 14 ஆம் தேதி  திங்கட்கிழமை, துவாதசி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.00 மணிக்குள் மிதுன இலக்கினம்  வளர்பிறை.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: